திடீரென உயிரிழந்த மன்மதன் படத்தயாரிப்பாளர் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு.
STR Condolences to Manmadhan Producer Death : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மன்மதன்.
சிம்பு மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து நடித்திருந்த இந்தப் படத்தை திரு கிருஷ்ணகாந்த் என்பவர் தயாரித்து இருந்தார்.
இவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக நேற்று உயிரிழந்தார். தற்போது இவருடைய மரணம் குறித்து நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம். மன்மதன் திரைப்படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.
என் மீது மிகுந்த அன்பு கொண்டவர் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த் அவர்கள். மன்மதன் படத்தை என் மீது நம்பிக்கை வைத்து இயக்க சொன்னவர். நீங்க ஸ்கிரிப்ட் பண்ணுங்க, இயக்குங்க என உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த எதிர்பார்ப்பை கொண்ட நல்ல மனிதர். அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலங்க வைக்கிறது. இவரது இழப்பினால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் அருகில் அந்த நல்ல ஆன்மா அமைதி கொள்ளட்டும் என தெரிவித்துள்ளார்.