மீனா சாதனை படைக்க முத்து வீடியோவை பார்த்து பயந்து போய் உள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வாசுதேவன் வீட்டுக்கு வந்த மீனா நீங்க பாத்து பையனுக்கு ஸ்ருதியை கட்டி வைத்திருந்தால் அவ உயிருக்கு உத்திரவாதம் இருந்திருக்காது. 

அவர் அவளுக்கு பிடித்தவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா தான் இருக்கா என்று எடுத்து சொல்கிறார். இப்போ அவங்க தனியா இருக்கறதுனால அவங்க வாழ்க்கைக்கு பாதுகாப்பு இல்லை எங்க வீட்டிலயும் அவங்களை ஏத்துக்கிற மாதிரி தெரியல பெத்தவங்களா நீங்கதான் ஏதாவது செய்யணும் அதற்கான கடமை உங்களுக்கு இருக்கு என்று சொல்லி மீனா அங்கிருந்து கிளம்பிச் செல்ல ஸ்ருதியின் அம்மா வாங்க பொண்ணு பாத்துட்டு வந்துடலாம் என்று கூப்பிட வாசுதேவன் அவ வாழ்க்கையே அவ பார்த்து கட்டும் நான் ஒரு இடத்துக்கு போக வேண்டியது இருக்கு என்று சொல்லி பிஜு வீட்டிற்கு கிளம்பி செல்கிறார். 

அடுத்ததாக முத்துவும் செல்வமும் சவாரி ஒன்றிற்கு வந்திருக்க மீனா அங்கு வந்து ஸ்ருதியை பார்க்கப் போன விஷயத்தை சொல்கிறார். முத்து கோபப்பட கட்டாயப்படுத்தி கூப்பிட்டாங்க அதனால பார்க்க போனேன் என்றும் அங்கு ஸ்ருதியை காப்பாற்றிய விஷயத்தையும் சொல்ல யாரு என்னமோ பண்ணிட்டு போறாங்க உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை உனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன ஆகிறது என்று முத்து கோபப்படுகிறார். 

அந்த நேரம் பத்திரிக்கையாளர்களும் மீனாவை பேட்டி எடுக்க வர அப்படி ஒன்னும் நான் எதுவும் செய்யலையே என மீனா குழப்பம் அடைகிறார். முத்து இவர் எதுக்கு பேட்டி எடுக்கணும் என்று கேட்க அந்த வீடியோவை காட்டி இதற்காகத்தான் பேட்டி எடுக்க வந்திருக்கும் என்று மீனாவிடம் கேள்வி கேட்க மீனா எல்லாம் என்னுடைய கணவர் கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான் என்று முத்துவை பெருமைப்படுத்தி பேசுகிறார். 

பிறகு முத்துவையும் பேட்டி எடுக்க அவர் என் பொண்டாட்டி யாரோ ஒருத்தர காப்பாத்தி இருக்கா அதுல எனக்கு பெருமை தான் என சந்தோஷமாக பேசுகிறார். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாக பார்வதி வீட்டுக்கு வந்து விஜயாவிடம் இந்த வீடியோவை காட்டி இதையே காரணமாக வைத்து ரவியையும் ஸ்ருதியையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடு என்று சொல்ல இருவரும் ரவியை பார்க்க கிளம்பி வருகின்றனர்.

சுருதி மேலே ரெஸ்ட் எடுக்க போய்விட ரவி ஷோபாவில் உட்கார்ந்து இருக்கும்போது பார்வதியும் விஜயா வீட்டிற்கு வந்து ஸ்ருதி குறித்து நலம் விசாரிக்கின்றனர். பிறகு ரவி ஸ்ருதியை கூப்பிட தலை வலிக்குதுன்னு தானே போன எதுக்குடா கூப்பிடுற என்று சத்தம் போட விஜயா அதை கேட்டு ஷாக் ஆகிறார். 

பிறகு அம்மா வந்திருக்காங்க என்று சொல்லி கூப்பிட்டு வரேன் பார்வதி எழுந்திடு நேரம் காலைல தான் வந்து விழுவா என விஜயாவை ஏற்றி விட விஜயாவை எழுந்து தயாராக நிற்க ஸ்ருதி வாங்க ஆண்ட்டி உட்காருங்கள் என்று சொல்லி நேராக சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்காருகிறார். ரவியை டீ போட சொல்கிறார்.

பிறகு டப்பிங் பேச போன் கால் வர இப்போதைக்கு வர முடியாது என்று பேசி கோபப்பட இது எல்லாம் பார்த்து விஜயா மிரண்டு போகிறார்.  ரவி அம்மா முன்னாடி கால் மேல் கால் போட்டு உட்காராத எனக்காக ப்ளீஸ் என கெஞ்சி மெசேஜ் அனுப்ப சுருதி அதை ஏற்றுக் கொண்டு நல்லபடியாக உட்காருகிறார்.  ‌   

பிறகு விஜயா எங்கே தனியா இருக்காதீங்கம்மா வீட்டுக்கு வந்துடுங்க என்று சொல்ல சுருதி முத்து பற்றி பேச அவன் முரடன் தான், கோபக்காரன் தான் அவனை பத்தி எல்லாம் யோசிக்காத நாங்க இருக்கோம்ல என்று சொல்ல நீங்க ரொம்ப ஸ்வீட் ஆன்ட்டி எங்க அம்மா கூட வந்து என்னை கூப்பிடல என்று விஜயா பக்கத்தில் வந்து உட்கார்ந்து உங்களுக்காக நான் யோசிக்கிறேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.