மீனா சாட்சி கையெழுத்து போட்ட நிலையில் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரவி மற்றும் ஸ்ருதிக்கு கல்யாணமான நிலையில் மீனா இருவரையும் பிடித்து திட்ட ரவி மற்றும் மன்னிப்பு கேட்டு காலில் விழ செய்கிறது எல்லாம் செஞ்சுட்டு மன்னிப்பு கேட்டா சரியா போயிடுமா உங்க அண்ணனுக்கு இப்பவே போன் பண்றேன் என கோபம் அடைகிறார்.

பிறகு அங்கு வந்த ஐயர் நடந்தது நடந்து போச்சு கையெழுத்து போடும் மீனா நீ ஆசீர்வாதம் பண்ண அந்த அம்பாளே ஆசீர்வாதம் பண்ண மாதிரி என்று சொல்ல மீனா வேறு வழி இல்லாமல் கையெழுத்து போடுகிறார். பிறகு ஒழுங்கா வீட்டுக்கு வந்து மாமா கிட்ட மன்னிப்பு கேளுங்க என்று சொல்லிவிட்டு மீனா கிளம்பி செல்கிறார்.

அதைத்தொடர்ந்து பிஜு கோவிலுக்கு வர அங்கு சுருதி இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு சென்று ஏன் சொல்லாம வந்தா என கோபப்பட அவ டப்பிங் ஸ்டுடியோக்கு போய் இருப்பார் என்று சொல்லி சமாளித்து அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அண்ணாமலை வீட்டிற்கு வருகின்றனர்.

ரவி ஸ்ருதியை கடத்தி விட்டதாக வந்து அண்ணாமலையிடம் அவர் ரவி அப்படி பண்ணி இருக்க மாட்டான் அவ ரெஸ்டாரண்ட் போயிருக்கான் என்று சொல்ல இப்பவே போன் பண்ணி வர சொல்றேன் என்று போன் செய்ய அஸ்வதி ஃபோனை ஸ்விட்ச் ஆப் செய்ய சொல்லி ஸ்விட்ச் ஆப் செய்து விடுகிறார்.

இதைத்தொடர்ந்து ஸ்ருதியின் அப்பா அண்ணாமலையின் சட்டையை பிடித்து கோபப்பட போலீஸ் வீட்டுக்கு வந்து அண்ணாமலையிடம் இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஒரு லெட்டர் எழுதி கொடுத்துட்டு வாங்க என சொல்ல முதலில் அண்ணாமலை உட்பட எல்லோரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.

அதன் பிறகு அரெஸ்ட் வாரண்டோடு உங்களை கைது செய்ய வேண்டி வரும் என்று சொல்ல அண்ணாமலை கிளம்பி செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.