குடி போதையில் முத்து உண்மையை உளர தொடங்க விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பைனான்சியரிடம் சென்று முத்து பணம் கொஞ்சம் கம்மியா இருக்கு வண்டியை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல அவர் நாய் போல் குறைத்து வெறுப்பேற்ற முத்து மூன்று நாளில் பணத்தை கொடுக்கிறேன் என்று சொல்லி கடுப்புடன் வெளியே வர நேராக பார் செல்கிறார்.
அங்கே சரக்கு அடிக்கும் முத்துவிடம் வந்து சுதாகரின் ஆட்கள் வம்பு இழுக்க அவர்களை அடி வெளுத்தெடுத்து வெளியே வருகிறார்.
மறுபக்கம் வீட்டுக்கு வந்த மனோஜ் தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை சொல்ல ரோகினியும் விஜயாவும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் மனோஜ் அவர் படிக்காத ஆளு முப்பது வருஷமா மெக்கானிக் வேலை பார்த்து இருக்கும் என்று சொல்ல விஜயா பணக்காரனாக அவ்வளவு நாள் காத்திருக்கணுமா என்று சொல்ல மனோஜ் இந்த காலத்தில் போய் உழைக்கணும் உடம்பு வலைக்கணும் என்றெல்லாம் பேசுகிறான் ஸ்மார்ட் வொர்க் செய்யணும், அதான் எனக்கு தெரிந்தது என்று சொல்ல ரோகிணியின் முகம் மாறுகிறது.
மேலும் நாளையிலிருந்து வேலைக்கு வேற போகணும் என்று பீல் செய்ய ரோகிணி இதையெல்லாம் கண்டு கொஞ்சம் அதிர்ச்சியடைகிறார். அடுத்ததாக மீனா வர மனோஜ்க்கு மாதுளம் பழம் ஜூஸ் போட்டு வந்து கொடுக்க சொல்ல மீனா ரோஹிங்கிடம் மாதுளம் பழம் உரித்தது பிரிட்ஜில இருக்கு, சர்க்கரை அலமாரில இருக்கு ஜூஸ் போட்டு கொடுங்க என்று சொல்லி ரூமுக்குள் சென்று விடுகிறார்.
அடுத்ததாக ரோகினி மற்றும் மனோஜ் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வர ரோகிணி கால் வலிக்குது என்று சொல்ல மனோஜ் அவரை தூக்கி வருகிறார். பிறகு முத்து குடி போதையில் வீட்டுக்கு வர மீனா தாங்கி பிடிக்க போற தொடாத நான் ஸ்டெடியா இருக்கேன் என்று டயலாக் பேசுகிறார்.
அடுத்ததாக மனோஜ் ஏண்டா இப்படி குடிச்சிட்டு வந்திருக்கேன் நீ திருந்தவே மாட்டியா என்று கேள்வி கேட்ட எல்லாம் உன்னால தான் அன்னைக்கு மட்டும் ஓடாமல் இருந்திருந்தால் என்று மனோஜ் ஓடிப்போன விஷயத்தை சொல்லத் தொடங்க விக்கல் வந்து விடுகிறது. இதனால் விஜயா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.