செல்வம் போலீசில் சிக்க முத்து அதிரடி முடிவெடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முதல் இரவு ஏற்பாடுகள் நடக்க பாட்டிமார்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மீனாவிடம் இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு எடுத்துச் சொல்ல அவர் வெட்கப்பட்டு ஓடி வந்து பாட்டி என்ன இப்படி எல்லாம் பண்றாங்க என கூச்சப்படுகிறார்.
இன்னொரு பெண்மணி கையில் ரேடியோ உடன் வர இது எதுக்கு என மீனா கேட்க உன்னையும் முத்துவையும் ரூமுக்கு அனுப்புறதுக்கு முன்னாடி ஒரு பாட்டு பாடி பாட வெச்சு அனுப்பி வைப்போம் என சொல்ல மீனா அது என்ன பாட்டு என கேட்க பாட்டி அந்த பாட்டை போட்டு காட்டுகிறார். இங்க மீனா கூச்சத்தில் நெளிய மறுபக்கம் முத்து தன்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் செல்வம் காரில் வந்து கொண்டிருக்க வழி மறிக்கும் போலீஸ் காரை சோதனையிட அதிலிருந்து சரக்கு பாட்டில்களை எடுத்து காரை ஓரங்கட்டு சீஸ் பண்ணனும் என சொல்கின்றனர். இதனால் பயந்து போகும் செல்வம் காரை நிறுத்தாமல் எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்புவது மட்டுமல்லாமல் முத்துவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல நீ பண்ணது தான் தப்பான விஷயம். நிறுத்தி இருந்தால் கூட வெறும் பைன் மட்டும் தான் போட்டு இருப்பாங்க, ஆனா இப்போ கார் மாட்டிக்கப் போகுது என பயப்பட அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் சென்னைக்கு வந்துடுறேன் நீ ஒன்னும் கவலைப்படாத என்று சொல்ல முத்து நான் உடனே கிளம்பி வருகிறேன் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.
ஏற்கனவே பாட்டி முத்துக்கு ஃபோன் செய்து வீட்டுக்கு வர சொல்லி இருந்த நிலையில் வீட்டுக்கு வரும்போது இந்த விஷயம் அறிந்த முத்து தன்னுடைய நண்பனிடம் என்னை பஸ் ஸ்டாண்ட்ல விட்டுடு, நான் சென்னை கிளம்பறேன் நீ பாட்டி இடம் விஷயத்தை சொல்லிவிடு என கிளம்பி செல்கிறார்.
இங்கே முத்துவுக்காக காத்திருந்தவர்கள் ஏமாந்து எல்லோரும் எழுந்து வீட்டுக்கு கிளம்ப மீனா எனக்கு ஒன்னும் இது புது விஷயம் கிடையாது. இந்த மாதிரி மூன்றாவது முறை ஏமாந்து நிற்கிறேன் என பாட்டியிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சமயம் பார்த்து முத்துவின் நண்பர் வீட்டுக்கு வந்து கார் பிடித்த விஷயத்தையும் முத்து சென்னை கிளம்பி சென்றதை பற்றியும் சொல்ல மீனா வருத்தப்படுகிறார்.
உடனே மீனா அவர் தனியா ரொம்ப கஷ்டப்படுவாரு நானும் சென்னை கிளம்பறேன் என சொல்லி கிளம்பி வருகிறார். இங்கே செல்வம் ஒரு வழியாக சென்னை வந்துட்டேன், பிரச்சனை எதுவும் இல்லை என முத்துவுக்கு போன் போட்டு சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவரை போலீஸ் சுற்றி வளைத்து விடுகிறது.
செல்வம் தாம்பரம் போலீசில் மாட்டிக் கொண்டதாக முத்துவிடம் சொல்ல முத்து அதிர்ச்சி அடைகிறார். மறுநாள் காலையில் முத்து ஆட்டோவில் சென்று கொண்டிருக்க சென்னை வந்து இறங்கிய மீனா அவருக்கு போன் செய்ய போன் எடுக்காமல் இருக்கிறார். இதனால் மீனா என்ன ஆச்சுன்னு தெரியலையே என புலம்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.