Pushpa 2

ரவி சொன்ன வார்த்தை,அண்ணாமலை எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி பேச ஆரம்பிக்க அண்ணாமலை முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

siragadikka asai serial today episode update 18-01-2025

siragadikka asai serial today episode update 18-01-2025

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பொண்டாட்டி களிடம் சண்டை போட்டுவிட்டு முத்து மனோஜ் ரவி மூவரும் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.ரவி கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணும் போதும் சரி பொண்ணுங்களா இருக்காங்க ஆனால் கல்யாணம் ஆனதுக்கப்புறம் ஹாஸ்டல் வார்டன் மாதிரி நடந்துக்கிறாங்க என்று சொல்ல அதற்கு முத்து நம்ம கடவுள் கிட்ட இது பத்தி கேட்டோம்னா பொண்ணுங்களா இருந்த வரைக்கும் தான் பொறுப்பு பொண்டாட்டிகளா மாத்துனதுக்கு அப்புறம் என்னோட பொறுப்பு கிடையாதுன்னு சொல்லிட்டு பாரு என்று தத்துவம் சொல்ல உடனே மனோஜ் ரோகினிக்கு போன் போட்டு முத்து சொல்ல தத்துவத்தை மனோஜ் அவர் சொன்னது போல் சொல்ல உடனே ரோகினி இத முத்து தான சொன்னா போன வை என்று சொல்ல மனோஜ் பல்பு வாங்குகிறார்.

மறுநாள் காலையில் அண்ணாமலை மற்றும் மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க விஜயா வருகிறார்.ரோகினி சாப்பிட வர மனோஜை பார்த்துவிட்டு சாப்பிடாமல் சென்று விடுகிறார் பிறகு ஸ்ருதி பசிக்குது என்று வந்தவுடன் ரவியை பார்த்துவிட்டு அவரும் சாப்பிடாமல் சென்று விடுகிறார் மீனா கோபத்தில் இருப்பதை பார்த்து அண்ணாமலை மூணு பேரும் பொண்டாட்டி கிட்ட சண்டை போட்டிங்களா என்று கேட்கிறார் கொஞ்சம் திருத்தம் என்று முத்து சொல்ல, ரவி நாங்க போடல அவங்க தான் எங்க கிட்ட சண்டை போட்டாங்க எங்க மேல எந்த தப்பும் இல்ல என்று சொல்ல வர அண்ணாமலை என்கிட்ட எதுவும் சொல்லாதீங்க உங்க குடும்ப பிரச்சினை நீங்க பார்த்துக்கோங்க என்று சொல்லிவிட்டு எழுந்து செல்கிறார். விஜயா அண்ணாமலை இடம் என்ன பிரச்சனைன்னு கேட்காமலே போறீங்க என்று சொல்ல அவங்க பிரச்சனையை அவங்க தீர்த்துப்பாங்க என்று சொல்லிவிட்டு சொல்லுகிறார் என்று சொல்ல ஏன் அவர் மொட்டை மாடியில் வரதுக்கு என்கிட்ட பேசாம இருக்கிறதுகா என்று சொல்லிவிட்டு விஜயாவும் கேட்காமல் சென்று விடுகிறார்.

பிறகு முத்து பாட்டியை அழைத்துக் கொண்டு வருகிறார். வரும்போது வீட்டுக்குள் வரும்போது இவ்வளவு விஷயம் நடந்திருக்கு எதுவுமே என்கிட்ட சொல்லல என்று கேட்க நீங்க கஷ்டப்படுவீங்கன்னு தான் சொல்லிருக்க மாட்டாரு அப்பா என்று முத்து சொல்லுகிறார் உடனே உள்ளே வந்தவுடன் நான் தான் அதை சந்தோஷத்தில் கட்டிப்பிடித்த பேச அந்த நேரம் பார்த்து விஜயா வந்து நலம் விசாரிக்கிறார்.

உடனே மீனா,ஸ்ருதி,ரவி வர அனைவரிடமும் கொஞ்சி பேசுகிறார் பாட்டி. மனோஜ் மற்றும் ரோகினி பார்த்து பாட்டியின் முகம் மாற மனோஜ் பாட்டியை வந்து கட்டிப்பிடித்து எப்படி இருக்கீங்க என்று கேட்க என்னடா தொழிலதிபரே எப்படி போகுது வேலை என்று கேட்டேன் நல்லதா போய்கிட்டு இருக்கு என்று சொல்லுகிறார். பிறகு ஏதாவது விசேஷம் இருக்கா என்று கேட்க அல்ல பொங்கல் வரப்போகுது என்று அவர் சொல்ல அதை சொல்லலடா என்று சொல்ல ரோகிணி அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி என்று சொல்லுகிறார்.

அந்த நேரம் பார்த்து நீத்து வீட்டுக்கு வர ரவி அவரை வரவேற்று உட்கார வைக்கிறார் அவரது ஹோட்டலில் ப்ரொமோஷன்காக சில விளையாட்டுகளை வைத்து ஒரு இவெண்ட் இருப்பதாக சொல்லி அதில் கலந்து கொள் அனைவரையும் வரவேற்கிறார். குடும்பத்தில் என்ன சொல்லுகின்றனர்?வர சம்மதிக்கிறார்களா? போட்டியில் எப்படி கலந்து கொள்கிறார்கள்?என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 18-01-2025

siragadikka asai serial today episode update 18-01-2025