நான் கல்யாணம் பண்ணா இப்படி ஒரு பெண்ணைக் தான் பண்ணுவேன் என மாநாடு படவிழாவில் ஓப்பனாக பேசியுள்ளார் நடிகர் சிம்பு.

Simbu About His Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக இவரது நடிப்பில் மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இந்த படத்தை இயக்கியுள்ளார்.

எதிர்காலத்தில், இவர்கள் 5 பேரும்தான் சூப்பர் ஸ்டார்கள் : ரிக்கி பாண்டிங் கணிப்பு

இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சிம்பு தற்போது தன்னுடைய படங்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மாநாடு படமும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது, என்னால முடியல என கண்கலங்கினார்.

படம் வேற மாதிரி இருக்கு – Sabhaapathy Public Review | Santhanam, Pugazh, MS.Bhaskar | HD

பிறகு மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் யுவன் சங்கர் ராஜா என்னுடைய நெருங்கிய நண்பர். இன்னும் சொல்லப் போனால் எனக்கு எனது அப்பா மாதிரி. எல்லாமே அவர்தான். நான் என்ன தொல்லை கொடுத்தாலும் அவர் அதை சகித்துக் கொள்வார். எங்களுக்குள் இந்த பாண்டிங் எப்படி உருவானது என்று தெரியவில்லை.

நான் யுவன் நட்சத்திரத்தில் இருக்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். ‌