வித்தியாசமான உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா சரண்.
தென்னிந்திய சினிமாவில் மழை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். இதை தொடர்ந்து ரஜினி, விஜய் என உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் வடிவேலு படத்தில் நடனமாடி மார்க்கெட்டை சிதைத்து கொண்டார்.
இதையடுத்து திருமணம் செய்து செட்டிலான ஸ்ரேயா தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வித்தியாசமான கவர்ச்சி உடையில் இடுப்பில் இருக்கும் மச்சம் தெரிய போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஸ்ரேயாவை வர்ணித்து வருகின்றனர்.