அரசன் படம் குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட சமுத்திரக்கனி.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

அரசன் படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் சமுத்திரக்கனி.

Samuthirakani shared interesting information about the film Arasan.!
Samuthirakani shared interesting information about the film Arasan.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார்.

அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா,விஜய் சேதுபதி, கிஷோர் குமார், சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இந்த படம் குறித்து சமுத்திரக்கனி சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் சிம்பு மற்றும் தனுஷ் காம்போ இருக்குமா என்று கேட்க அது டைரக்டர் தான் கேக்கணும் என்று சமுத்திரக்கனி சொல்லியிருக்கிறார் இது மட்டும் இல்லாமல் நான் இருக்கிறேன் என்று சொல்லிட்டாரு குணா, செந்தில், சந்திரா மூணு பேரும் இருக்காங்க வேற என்ன வேணும் படம் ஸ்டார்ட் பண்ணும்போது கூப்பிட்டா போய் நிக்க வேண்டியது தான் என்று சொல்லி இருக்கிறார்.

படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த இவர்,ஒரு பெரிய மேஜிக் நடக்கும் அதற்கான ஸ்கிரிப்ட் தான் இந்த படம். பெரிய உழைப்பு பெரிய படமா வரும் என்று சொல்லி இருக்கிறார். இவர் கூறிய இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Samuthirakani shared interesting information about the film Arasan.!
Samuthirakani shared interesting information about the film Arasan.!