சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தினர். தற்போது அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு தொடரப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்து நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.
பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து நாளை சீராய்வு மனு தீர்ப்புக்கு அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.
இதுவரை கோவிலுக்கு வந்த 4பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி அப்பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கேரளாவை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீது கோர்ட் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. சபரிமலையில் பதட்டம் நிலவி வரும் இந்நிலையில் நாளை வழங்க இருக்கும் தீர்ப்பு அனைவருக்கும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.