விஜய் டிவியிலிருந்து பிரபல நடிகர் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் 90-களில் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரஞ்சித். பொன் விலங்கு என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
விஜய் டிவி சீரியலை தொடர்ந்து ரஞ்சித் அடுத்ததாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சீரியல் ஒன்றில் என்ட்ரி நடிக்க போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதற்கு முன்னதாக இவரது மனைவி பிரியா ராமன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்திருந்தார்.
அந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ரஞ்சித் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரஞ்சித் நடிக்க போவது என்ன சீரியலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.