Raja Rani2 Episode Update 19.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிராமமான சீரியல் ராஜா ராணி 2. ப்ளைட் டிக்கெட்டை எடுத்து பழைய பேப்பர்காரனிடம் போட்ட மகிழ்ச்சியில் அர்ச்சனா சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் செந்தில் வந்து என்ன வாயெல்லாம் பல்லா இருக்கு என கேட்க அப்போது உங்க வீட்ல தான் யாரும் சந்தோஷமாக இருந்தா பிடிக்காதே. அதுவும் நான் சந்தோஷமா இருந்தா சுத்தமா பிடிக்காது என சொல்ல நீ புலம்பிட்டு இரு என செந்தில் படுத்துத் தூங்குகிறார்.
இந்த பக்கம் சரவணனை அப்பா ப்ளைட்டில் போவதை நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் சிவகாமி வந்து அமர்கிறார். இருவரும் விமானத்தின் போவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். சரவணனின் புகழ் உலகம் முழுவதும் பரவும் என அவனுடைய அப்பா சொல்ல இதற்கெல்லாம் காரணம் சந்தியா தான் என சந்தியாவை பாராட்டுகிறார் சிவகாமி. நம்ம புள்ளைக்காக இதுவரைக்கும் என்ன செய்திருக்கோம். ஆனா சந்தியா ஒவ்வொண்ணா பண்ணி அவன நாளுக்கு நாள் உயர்த்திக் கொண்டே இருக்கா என பாராட்டுகிறார்.
இந்தப் பக்கம் சரவணன், சந்தியா வாங்கிக் கொடுத்த டீ-சர்ட்டை போட்டு அழகு பார்க்கிறார். இதனைப் பார்த்த சந்தியா சூப்பராக இருக்கு என கூறுகிறார். பிறகு மயில் வந்து சரவணனை பார்த்து ஆச்சரியப்பட்டு விட்டு அவரை இழுத்துக்கொண்டு அனைவரிடமும் காட்டுகிறார். வீட்டில் உள்ள அனைவரும் கூடுகின்றனர்.
எல்லோரும் சூப்பராக இருப்பதாக கூற ஆதி மட்டும் நல்லாவே இல்லை என கூறுகிறார். இந்த நேரத்தில் சிவகாமி அர்ச்சனாவும் உள்ளே இருந்து வருகின்றனர். சிவகாமி வித்தியாசமாக பார்த்ததை பார்த்து அர்ச்சனா இன்னைக்கு பெரிய பிரச்சனை இருக்கு என எதிர்பார்க்கிறார். கடைசியில் சிவகாமி இந்த டிரஸ்ல சூப்பரா இருக்கு ஆனா உனக்கு இதெல்லாம் தோணாதே. இதெல்லாம் சந்தியா வேலையா என கேட்டு சந்தியாவை பாராட்டுகிறார். பிறகு மயிலு எனக்கு சந்தியாமா மினி கட்ஸ் வாங்கித் தரதா சொன்னாங்க என சொல்கிறார்.
அர்ச்சனா அதனை போட்டுகிட்டா ஹீரோயினி போல மாறிவிடும் என்பதை விட ஆட்டோகிராப் வாங்க காத்துகிட்டு இருக்கணும் என கிண்டல் அடிக்கிறார். அனைவரும் சேர்ந்து குடும்பத்தோடு போட்டோ எடுத்துக் கொள்கின்றனர்.
அர்ச்சனா என்னை மீறி எப்படி நீங்க ப்ளைட்ல போறீங்கனு நான் பார்க்கிறேன் என மனதிற்குள் பேசிக் கொள்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்.