சந்தியாவால் சிவகாமி கடுப்பாக பாரதி சொன்ன வார்த்தையால் சௌந்தர்யா அதிர்ச்சடைந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடு வெண்பா பங்க்ஷனுக்கு வந்து அதிர்ச்சி கொடுத்திருந்த நிலையில் கண்ணம்மா பாரதி மற்றும் வெண்பா தான் ஹேமாவுக்கு அம்மா என சொன்னால் நான் சும்மா இருக்க மாட்டேன். அப்போ இந்த கண்ணம்மாவை விட ருத்ரதாண்டவத்தை நீங்க பார்ப்பீங்க என கூறுகிறார்.

அதன் பிறகு கண்ணம்மா சந்தியாவை சந்தித்து திருமண நாளில் சரவணன் என்ன கிப்ட் கொடுத்தார் என கேட்க சந்தியா அவர் போலீஸ் உடையை கொடுத்ததாக சொல்கிறார். உங்களை போலீஸ் உடையில் பார்க்க ஆசைப்படுகிறேன் என சொல்லி கண்ணம்மா சந்தியாவை மேலே உள்ள ரூமுக்கு அழைத்துச் சென்று சந்தியாவை போலீஸ் கெட்டப்பில் வர வைக்கிறார். சந்தியா முதல் முறையாக இப்போதுதான் போலீஸ் டிரஸ் போடுகிறேன் என சொல்ல இதை சரவணன் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என சரவணனுக்கு ஃபோன் போட்டு மேலே உள்ள ரூமுக்கு வர சொல்கிறார்.

கொஞ்ச நேரத்தில் கதவை தட்ட சரவணன் வந்துவிட்டதாக நினைத்து கண்ணம்மா கதவை திறக்க சௌந்தர்யா சிவகாமியை அழைத்துக் கொண்டு வருகிறார். சிவகாமி அம்மா டயர்டா இருக்குன்னு சொன்னாங்க அதனால அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் என சொல்ல சிவகாமி உள்ளே வந்து சந்தியா போலீஸ் உடைய இருப்பதை பார்த்து அதிர்ச்சடைந்து வெளியே சென்று விடுகிறார். பிறகு சரவணன் உள்ளே வந்து என்னாச்சு என கேட்க சந்தியா போலீஸ் உடையில் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி கொள்கிறார்.

மேலும் சௌந்தர்யாவிடம் அம்மாவுக்கு சந்தியா போலீஸ் ஆவதில் விருப்பமில்லை என சொல்ல கண்ணம்மா இத பத்தி சொல்லி இருக்கா நான் அவர்களிடம் பேசுகிறேன் என சொல்கிறார். பிறகு சௌந்தர்யா சிவகாமியை சந்தித்து இன்னைக்கு உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பொண்ணுங்க நிறைய சாதிக்கிறார்கள். சந்தியா கிட்ட எல்லா திறமையும் இருக்கு அவ என்னைக்கும் உங்க குடும்பத்துக்கு பெருமையை மட்டும் தான் சேர்ப்பார். அவன் போலீஸ் அதிகாரியாக நீங்கள் அவளுக்கு உறுதுணையாக இருங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

அதன் பிறகு பாரதி வெண்பாவிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அங்கு சென்று உன்னிடம் தனியாக பேச வேண்டும் என கூறுகிறார் சௌந்தர்யா. பிறகு ஹேமாவுக்கு என்ன கிப்ட் கொடுக்கப் போகிறாய் என கேட்க பாரதி தங்கச்செயின் வாங்கி வந்திருக்கிறேன் என சொல்கிறார். நான் அத கேக்கல ஹேமா கேட்டேன் கிப்ட்டா என்ன சொல்ல போற என கேட்கிறார். இந்த வெண்பாவை மட்டும் அம்மா என்று சொல்லிடாத என சொல்ல பாரதி இந்த ஐடியா எனக்கு தோணாமல் போச்சு இது நல்லா ஐடியாவா இருக்கு என கூறுகிறார்.

இப்படியான நிலையில் பாரதி நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன் ஆனால் என்ன நடக்குதுன்னு கொஞ்சம் பொறுத்து இருந்து பாருங்க. இடையில புகுந்து யாராச்சு அந்த கண்ணம்மாவை அம்மா என்று சொல்ல நினைச்சீங்கன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் என மிரட்டுகிறார். இதனால் சௌந்தர்யா அதிர்ச்சடைகிறார். இப்படியாக இன்றைய பாரதி கண்ணம்மா ராஜா ராணி சீரியலின் 2-ம் பாதி எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.