போலீசில் சிக்கி தப்பிய செல்வம் பார்வதியை வைத்து சந்தியாவை கொல்ல திட்டமிட்டுள்ளார்.

Raja Rani 2 Episode Update 27.05.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோட்டில் சந்தியாவிடம் இருந்து தப்பிய செல்வம் தன்னுடைய அமைப்பினர் இருக்கும் இடத்திற்குச் சென்று நடந்த விஷயத்தை கூறுகிறார். இதனால் அவர்கள் போலீசுக்கு நம்முடைய திட்டமெல்லாம் தெரிஞ்சிடுச்சா நீ யார் என்ற விஷயம் கண்டுபிடித்து விட்டார்களா என கேட்க அதெல்லாம் இல்லை அதற்குள் நான் தப்பிவிட்டேன் என கூறுகிறார்.

மேலும் இனிமே அந்த சந்தியாவை விட்டு வைக்கக் கூடாது. கொன்றுவிடலாம் என அமைப்பினர் சொன்ன செல்வம் வேண்டாம் இப்போது எல்லோரும் சந்தியாவை டார்கெட் செய்வோம் என்று தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள் ஆனால் நம்முடைய திசையை மாற்ற வேண்டும். சந்தியாவை நிச்சயமாக சும்மா விடமாட்டேன் யாரைக் காப்பாற்ற நினைக்கிறார் அதே பார்வதியை வைத்து அவளை கொல்லப் போகிறேன் என கூறுகிறார்.

இதையெல்லாம் கேட்ட பார்வதி அதிர்ச்சி அடைகிறார். ஆனால் இவர்களுக்கு தன் கேட்ட விஷயம் தெரியாதது போல மயங்கிக் கிடப்பது போல நடிக்கிறார். இந்தப் பக்கம் சரவணன் பார்வதி பற்றி நினைத்து வருத்தத்தோடு இருக்க சந்தியா அவருக்கு ஆறுதல் கூறுகிறார். பார்வதியை எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டும் அதற்காகத் தான் நான் உங்களிடம் நடந்த விஷயங்கள் எதையும் சொல்லவில்லை. நான் ரிஸ்க் எடுப்பதை பார்த்தால் நீங்கள் பயந்து போனார்கள் அதனால்தான் சொல்லவில்லை என மனதிற்குள் சொல்லிக் கொள்கிறார் சந்தியா.

மறுநாள் காலையில் சிவகாமி அழுது கொண்டிருக்க காபி எடுத்து வந்து கொடுக்கிறார் சந்தியா. ஆனால் சிவகாமி வெறுத்துப்போய் பேச இனி நான் சாமியை கும்பிட போவதில்லை எனக் கூறுகிறார். இந்த நேரத்தில் பாஸ்கரின் அம்மா போன் செய்து எல்லோரும் குடும்பத்துடன் கோவிலுக்கு போய்ட்டு வாங்க அதை சொல்லத்தான் போன் செய்தேன் என கூறுகிறார். பிறகு சந்தியா இந்த விஷயத்தை சொல்லி கோவிலுக்கு போவது தான் உள்ளது அக்கம்பக்கத்தில் எல்லோரும் இது பற்றி கேட்க தொடங்கிவிடுவார்கள் என்று கூறுகிறார்.

சரவணன் பாஸ்கரை வேண்டுமானால் முன்னாடி போக சொல்லிட்டு இருவரும் தனியாகச் சென்று விட்டார்கள் என சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என கூறுகின்றனர். சிவகாமியின் சரி கிளம்பலாம் என கூறுகிறார். அதன் பிறகு சந்தியா பார்வதியை இன்னைக்கு எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும் என சபதம் போடுகிறார். தன்னுடைய அப்பா அம்மாவின் போட்டோவை பார்த்து ஒரே நிமிடத்தில் நம்முடைய குடும்பம் எப்படி சீர்குலைந்து போனது அது போல் இனி இந்த தென்காசியில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடக்க கூடாது என பேசுகிறார்.

இந்த பக்கம் செல்வம் சக்கரைக்கு மனித வெடிகுண்டு கோர்ட்டை போட்டு விடுகிறார். இந்த நேரத்தில் சந்தியாவும் சரவணனும் வந்து கோர்ட்டு நல்லா இருக்கு என கூறுகின்றனர். தான் நடந்து காண்பிப்பதாக சொல்லிக் நடந்து காண்பிக்க கீழே தவறி விழ பார்த்த சர்க்கரையை இழுத்து பிடிக்கிறார் செல்வம். பிறகு சந்தியா சரி வாங்க எல்லோரும் கோவிலுக்கு ஒன்றாக போகலாம் என சொல்ல செல்வம் கதையில் வேலை இருக்கு எல்லோரும் போய்விட்டா எப்படி என கூறுகிறார். ஊர்ல திருவிழா இருக்கும்போதுகூட கடையை திறந்து வைத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை வாங்க போகலாம் என சொல்ல சரவணன் அவர்களை அழைக்கிறார்.

சரி நீங்க முன்னாடி போங்க நான் கடைய மூடிட்டு கொஞ்சம் பொருட்களை வாங்கிக்கொண்டு வருகிறேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.