சந்தியாவின் கனவு பற்றி சரவணன் சொல்ல சிரித்தபடி சிவகாமி கொடுத்த பதில் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
Raja Rani 2 Episode Update 08.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சிவகாமி பூஜைக்காக தயார் செய்து கொண்டிருக்கிறார். அனைவரும் பூஜை அறையின் வெளியே நின்று கொண்டிருக்க அப்போது நண்பர் சரவணன் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் கேட்க வேண்டும் என கூறுகிறார். பூஜையை முடித்துவிட்டு வரையில் அதன் பிறகு பேசலாம் என்று சிவகாமி சேர்ந்த இல்லம்மா எல்லாரும் இருக்கும்போதே பேசணும் இப்பவே பேசணும் இப்பவே அழைக்கிறார். பேசணும்னு முடிவு பண்ணிட்டு இருக்க என்ன விஷயம் சொல்லு என சிவகாமி எழுந்து வந்து கேட்கிறார்.
சரவணன் சந்தியாவின் குடும்பத்தை பற்றி பேச ஆரம்பித்து அவர்களுடைய அப்பா அம்மா அவரை சின்ன வயதிலிருந்தே கனவை அவருடைய மனதுக்குள் ஊட்டி வளர்த்துள்ளனர். சந்தியாவின் அதை தன்னுடைய கனவாக நினைத்து வளர்ந்துள்ளார். ஆனால் விதி குண்டுவெடிப்பில் அவருடைய அப்பா அம்மாவை பறித்துக்கொண்டது. அவருடைய அண்ணன் சந்தியா படிக்காதவர் என பொய் சொல்லி கல்யாணம் பண்ணி வைத்து விட்டார். அதன் பிறகு அவர் படிக்காதவர் என்ற விஷயம் தெரியவர நீங்கள் அவருக்கு பரிட்சை வைத்து அதன் அவர் பாசாகி மீண்டும் உள்ளே வந்தார். மேலும் அவருடைய அப்பா அம்மா இறக்கும் போது கடைசியாக தன்னை பார்த்ததில் அந்த பேனாவை தன்னிடம் கொடுத்ததை பற்றியும் சரவணன் கூறுகிறார். அவர்களின் கனவு சந்தியாவின் பெரிய போலீசாக்கி பார்க்க வேண்டும் என்பதுதான். ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. சந்தியா என்னை கல்யாணம் செய்தது வரை எல்லாமே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவருடைய அப்பா அம்மாவை நான் பார்க்கணும் இந்தப் பேனா எடுத்து என்னிடம் வந்து சேரணும் சந்தியா ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கணும். அவர் தன்னுடைய கனவை மூடி மறைத்துக் கொண்டு இந்த ஆசையை ஏன் இந்த சின்ன குழந்தைக்கு கடிதாசி எழுதி வைத்து சொல்ல வேண்டும். இந்த கடுதாசி ஏன் என்னிடம் வந்து சேர வேண்டும். அவர்களுடைய அப்பா அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டியது என்னுடைய பொறுப்பு என ஆண்டவன் நினைக்கிறான் போல என சரவணன் கூறுகிறார்.
இப்போ நீ என்ன சொல்ல வர என கேட்க சந்தியாவின் ஆசையை நான் நிறைவேற்ற வேண்டுமென நினைக்கிறேன் என சரவணன் சொல்ல சிவகாமி சிரித்தபடி நல்ல விஷயம் தான் உன் மாமனார் மாமியார் ஆசையை நிறைவேற்ற முன்னே நீ நெனைக்கிற ஆனா இதை கேட்டு அம்மா என்ன நினைப்பாங்கனு யோசிச்சு பார்க்கல. போலீஸ் முதலே எனக்கு பிடிக்காது இதுல பெரிய போலீஸ் அதிகாரியா என் மருமகளை ஆக்க போறேன்னு வந்து என்கிட்டயே சொல்ற. இதற்கு ஒரு கணமேனும் சம்மதிக்க மாட்டேன் என்று அந்த சந்தியா இது எல்லாம் பேச சொல்லி அனுப்பிவிட்டு அவர் ரூமுக்குள்ள இருக்காளா என சந்தியா என கூச்சல் போடுகிறார்.
நான் அவங்களுக்கு தெரியாம தான் உங்களிடம் வந்து பேசுகிறேன். அவளே அவள் தயார் செய்ய முடியும் மறைச்சுகிட்டு வாழப் பழகிக்கிட்ட போது நீ எதுக்கு கிளறுற, இந்த விஷயத்தை இதோட விட்டுடு என கோபப்பட்டு விட்டு உள்ளே சென்று விடுகிறார். பிறகு அதெல்லாம் ஆகாது என நக்கலாக பேசி விட்டு உள்ளே செல்கிறார். ஆதியும் நக்கல் அடித்து விட்டு சென்று விடுகிறார். சரவணனின் அப்பா, செந்தில் மற்றும் பார்வதி ஆகியோர் மீண்டும் அம்மாவிடம் பேசு கண்டிப்பா சந்தியா ஆசையை நிறைவேற்ற ஒத்துப்பா என ஆறுதல் கூறுகின்றனர்.
இந்த பக்கம் நேரமாயிடுச்சு என பதறி எழுந்த சந்தியா வெளியே செல்ல முற்படுவது அவருடைய அண்ணன் போன் செய்து உன்னுடைய கனவுகள் பற்றி எல்லா விஷயத்தையும் சரவணனிடம் சொல்லிவிட்டு வந்தேன் நானே சொல்லிட்டேன் என சந்தியா கூறுகிறார். அவர் அதிர்ச்சி ஆவார் என நினைத்தேன். ஆனால் என்னுடைய கனவை நிறைவேற்ற வேண்டியது என்னுடைய கடமை என கூறினார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது என சந்தியா சொல்கிறார். மேலும் நேற்று என்னை படிக்க சொல்லி இரவு நேரத்தில் டீ எல்லாம் போட்டுக் கொடுத்தார் என சொல்ல சந்தியாவின் அண்ணன் மகிழ்ச்சி அடைகிறார். சரி நான் இதை உங்க அண்ணி கிட்ட சொல்றேன் அது ரொம்ப சந்தோஷப்படுவார் என சொல்லிவிட்டு போனை எடுக்கிறார்.
வெளியே நடந்த விஷயம் தெரியாமல் சந்தியாவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.