Rachitha Comment About Her Serial : விஜய் டிவியின் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலின் கதாநாயகியான ரக்ஷா, சீரியலில் இருந்து தன்னை தூக்கி விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
நான், பொதுமுடக்கம் அறிவித்தல் பிறகு பெங்களூருக்கு கிளம்பி வந்தேன். இரண்டு மாதங்கள் கழித்து தற்பொழுது சூட்டிங் இருக்கிறது என்று கூப்பிட்டார்கள். ஆனால், நான் இப்பொழுது பெங்களூரில் இருப்பதால், சென்னையில் அதிகம் கொரோனா பரவல் இருப்பதால், எங்கள் வீட்டில் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டாம் என்கிறார்கள்.
நான் இப்பொழுது சென்னையில் இருந்தால் கூட ஷூட்டிங்ல கலந்து கொள்ள முயற்சிப்பேன். ஆனால் வேறு மாநிலத்தில் இருப்பதால் இ-பாஸ் போன்ற நடவடிக்கையினால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.
எனக்கு கொஞ்சம் அவகாசம் கேட்டேன். ஆனால் தற்பொழுது என்னுடைய கதாபாத்திரத்தில் “சரவணன் மீனாட்சி” புகழ் ‘ரட்சிதா’ நடித்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். எனக்கு யார் மேலேயும் எந்த கோபமும் இல்ல, சூழ்நிலை சரி இல்லாமல் இருப்பதற்கு யார் என்ன செய்ய முடியும்?
என் கதாபாத்திரத்திற்கு வேறு நபரை தேர்வு செய்ததை என்கிட்ட கொஞ்சம் சொல்லி இருக்கலாம், அது தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு! என்று மனம் குமுறியுள்ளார் போல்டான ரக்ஷா.