பாப் கட்டிங் செய்த யானையுடன் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் பிரியங்கா நல்காரி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி.
இதனைத் தொடர்ந்து இவர் சீதாராமன் என்ற சீரியலில் நடித்த தொடங்கி அதிலிருந்து வெளியேறினார். பிறகு திருமணத்திற்கு பிறகு இந்த சீரியலில் இருந்து தற்போது அதே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நள தமயந்தி சீரியலில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தள பக்கங்களில் இப்போதும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது மன்னார்குடி கோவில் ஒன்றில் பாப் கட்டிங் செய்த யானையுடன் க்யூட்டாக எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.