போனது போனது தான் என்று தனது பிரிவை பற்றி மறைமுகமாக பேசி உள்ளார் பிரியங்கா நல்காரி. 

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நல்ல தமயந்தி சீரியலில் நடித்து வருகிறார். 

இவர் இதே சீரியலில் சீதாராமன் என்ற தொடரில் நடித்து வந்த போது ராகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு சீதாராமன் தொடரில் இருந்து வெளியேறிய இவர் சில மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் நளதமயந்தி சீரியலில் நடிக்க தொடங்கினார். மேலும் சமீபத்தில் இவரின் கணவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. அதை பிரியங்காகவும் உறுதிப்படுத்தி இருந்த நிலையில் தற்போது கணவருடனான பிரிவு பற்றி ஸ்டோரி ஒன்றின் மூலம் கூறியுள்ளார் ‌

அதாவது, போனதை பத்தி யோசிக்காதீங்க.. போனது போனது தான். அதை பற்றி நினைக்காதீங்க. அடுத்து என்னனு யோசிங்க. Present தான் முக்கியம். அதை மட்டும் என்ஜாய் பண்ணுங்க” என அவர் கூறி இருக்கிறார்.  

https://www.instagram.com/reel/C3-tN80PsfT/?igsh=MXNqMDBpdGxwcDc5ZA==
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.