கண்ணன் பணம் திருடிய விஷயத்தை கஸ்தூரி வீட்டில் போட்டு உடைக்க தன்னுடைய அப்பாவிடம் சண்டைக்கு போயுள்ளார் மீனா.

Pandian Stores Episode Update 02.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஐஸ்வர்யா கஸ்தூரியுடன் 15000 பணம் கேட்ட நிலையில் அவர் தனம் வீட்டுக்கு வந்து மூர்த்தியிடம் நலம் விசாரித்து நல்லபடியாக பேசிவிட்டு பின்னர் விஷயம் தெரியுமா என கேட்டு கண்ணன் வேலை செய்த இடத்தில் பதினைந்தாயிரம் பணம் திருடி விட்டான். அந்தப் பணத்தை உடனே தரவேண்டுமென மீனாவின் அப்பா கேட்க கதிர் பணத்தை கொடுத்து உதவி வீட்டில் பொய் சொல்லி உள்ளார் என உண்மையை போட்டு உடைத்து விட்டு வீட்டிற்கு கிளம்பி விடுகிறார்.

இன்றைய ராசி பலன்.! (2.12.2021 : வியாழக் கிழமை)

இதனையடுத்து மூர்த்தி கதிருடன் நடந்தது உண்மையா எனக் கேட்க ஆமாம் ஆனால் கண்ணன் பணம் திருடி இருக்க மாட்டான் என கூறுகிறார். இந்த வீட்ல ஆள் ஆளுக்கு அவங்க உங்கள முடிவு எடுத்துக்கிறாங்க வீடு வீடாக இல்லை என சத்தம் போட்டுவிட்டு மூர்த்தி கடைக்கு கிளம்பிவிடுகிறார். தனம் ஏண்டா சொல்லல எங்க கிட்டயாவது சொல்லி இருக்கலாம்ல, என கோபித்துக்கொண்டு கதிருடன் பேசாமல் போய் விடுகிறார்.

இந்த பக்கம் கடையில் மூர்த்தியும் ஜீவாவும் பேசிக்கொண்டிருக்க அப்போது கண்ணன் பணம் திருடி இருக்க வாய்ப்பில்லை என ஜீவா சொல்கிறார். கதிர் தான் பாவம் ஆரம்பத்திலிருந்தே ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிக்கொண்டு இருக்கான் என கூறுகிறார்.

இந்த பக்கம் கதிர் முல்லை இடம் அண்ணி எதாச்சும் சொன்னாங்களா என கேட்க அவங்க என்கிட்ட பேசவே இல்லை என கூறுகிறார். அதுக்குத்தான் அன்னைக்கு சொல்லலாம்னு சொன்னேன் நீங்க கேட்டீங்களா என முல்லை கூறுகிறார். இந்த நேரத்தில் தனம் வந்து முல்லை சாப்பாடு ஆயிடுச்சா அவன சாப்பிட்டு போக சொல்லு என சொல்லி விட்டு உள்ளே சென்று விடுகிறார். பின்னாடியே போன கதிர் அண்ணி ஏன் என்கிட்ட பேச மாட்டீங்க என கண் கலங்குகிறார். மாமா கேட்டதுல என்ன தப்பு? நீ ஏன் யார்கிட்டயும் எதுவும் சொல்லல. மாமா கிட்ட சொல்லாத நாளும் என்கிட்ட சொல்லியிருந்தா நான் அவர்கிட்ட நேரம் பார்த்து சொல்லியிருப்பேன் இல்ல என கேட்கிறார். அன்னைக்கு சொல்லி இருந்தா பிரச்சனை வேற மாதிரி ஆகி இருக்கும் அதனால கொஞ்சம் தள்ளிப்போடலாம் என்று தான் நினைத்தேன். சொல்லக் கூடாதுனு யோசிக்கல என கூறுகிறார்.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா? 

பிறகு கதிர் கண்கலங்க தனம் எதுக்குடா இதுக்கு சின்ன புள்ள மாதிரி அழுதது இருக்க சரி விடு என சமாதானம் செய்து அவரிடம் பேசுகிறார். பிறகு இருவரும் சேர்ந்து முல்லையை கலாய்க்கின்றனர். பிறகு முல்லை அமர்ந்து கொண்டிருக்க அந்த நேரத்தில் மீனா கயல் பாப்பாவை தூக்கி வந்து கொடுத்துவிட்டு கொஞ்சம் பார்த்துக்கோங்க எங்க அப்பா வீட்டு வரைக்கும் போயிட்டு வரேன் என சொல்கிறார்.

உடனே ஜீவாவுக்கு போன் செய்து கொஞ்சம் வீட்டு வரைக்கும் வா அப்பாவைப் பார்த்தது வரப்போகும் என சொல்கிறார். ஜீவா எதுக்கு என்ன என விசாரிக்க எல்லாம் உனக்கு தெரியும் சொன்னத செய் என கூறுகிறார். இப்போ நான் தனியா போனா நல்லா இருக்காது நீ என் கூட வா என கூறுகிறார். பிறகு ஜீவா மீனா கூப்பிடுறான் வீட்டு வரைக்கும் போயிட்டு வரேன் என மூர்த்தியிடம் சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

இருவரும் சேர்ந்து ஜனார்த்தனன் கடைக்கு செல்ல அப்போது ஜனார்த்தனன் கடைக்கு வந்த ஒருவரிடம் கண்ணன் பணம் திருடி விட்டதாக அதனால் வேலையை விட்டு அனுப்பி விட்டதாக கூறுகிறார். அதன்பிறகு மீனா நீங்க எப்படி கண்ணன் தான் பணம் எடுத்தால் சொல்லலாம். அவன் எடுத்தால் அதை எடுத்தால் தான் சொல்ல முடியும் என ஜனார்த்தனன் கூறுகிறார். கண்ணன் அப்படிப்பட்ட பையன் இல்லை என ஜீவா சொல்ல நானும் அப்படி நம்பித்தான் கடையை முழுசா அவனிடம் ஒப்படைத்து விட்டு வெளியே சென்றேன். பணம் புழங்கும் இடம் என்பதால் அதை பார்த்ததும் கையை வைத்து விட்டான் என கண்ணன் மீது பழி சொல்கிறார் ஜனார்த்தனன். இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.