பாண்டியன் ஸ்டோர் சீரியல் மொத்தமாக முடிவுக்கு வருவது எப்போது என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளின் பாச கதையாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
பிரசாந்தின் சதியால் ஜீவா மற்றும் கதிர் ஜெயிலுக்குள் சென்றுள்ள பிரசாந்த் சூழ்ச்சிகள் அனைத்தையும் மூர்த்தி தலைமையிலான டீம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ள நிலையில் ஜீவா மற்றும் கதிர் ஜெயிலில் இருந்து வெளியே வந்தவுடன் குடும்பம் மொத்தமும் ஒன்று சேர்ந்து இந்த சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சீரியலின் கிளைமாக்ஸை வரும் சனிக்கிழமை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இந்த சீரியலின் இரண்டாவது சீசன் தொடங்குமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.