PA.Chidambaram Arrested :
சென்னை: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தலைமறைவாக இருந்த ப.சிதம்பரத்தை, அவரது வீட்டிற்குள் சுவர் எகிறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் இந்திய அரசியலையே உலுக்கியது குறிப்பிடதக்கது.
கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் ப .சிதம்பரத்திற்கு பெயில் வழங்க முடியாது என்று கூறி தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் திருவள்ளூர் தொகுதி எம்.பி். ஜெயக்குமார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியின், காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.