ஜெயிலர் போஸ்டரால் நெல்சன் ரூட்டை மாற்றுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த இரண்டு திரைப்படங்களும் டார்க் காமெடியை மையமாகக் கொண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. நெல்சன் என்றால் டார்க் காமெடி தான் பெஸ்ட் என அனைவர் மனதிலும் பதிந்து விட்டது.
இதே எதிர்பார்ப்போடு தான் ரசிகர்கள் அனைவரும் விஜய்யின் பீஸ்ட் படத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் படத்தில் எதிர்பார்த்தது போல டார்க் காமெடி பெரிய அளவில் இல்லாதது படத்திற்கு பெரும் சரிவை ஏற்படுத்தியது.
இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள ஜெயிலர் படத்தை அடுத்ததாக நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
கத்தி தொங்க அதில் ரத்தம் சொட்ட என வன்முறையை பேசும் வகையில் இந்த டைட்டில் லுக் போஸ்டர் இருந்தது.. டைட்டில் லுக் ரசிகர்களை கொண்டாட வைத்திருந்தாலும் அதேசமயம் நெல்சன் ரூட்டை மாற்றுகிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
காமெடி ட்ராக்கை விட்டு முழுசாக டிராக் வருகிறாரா என்று அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க??