தன்னுடைய பழைய காதல் முடிவுகளை குறித்து பேசியுள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
Nayanthara Says About Love : தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
இவர் ஆரம்பத்தில் சிம்புவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அந்த காதல் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் பிரபுதேவாவை காதலித்தார். அவருக்காக இந்து மதத்திற்கு மாறினார். ஆனால் இந்த காதலும் தொடரவில்லை.
பிரபுதேவாவுக்காக படங்களில் நடிப்பதையும் நிறுத்திக் கொண்ட நயன்தாரா அந்த காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி நானும் ரவுடிதான் படத்தின் மூலம் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார்.
இந்த நிலையில் அவர் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருக்காது. நம்பாத ஒருவருடன் வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல் என முடிவெடுத்தேன். அதனால் தான் காதல் பிரிந்தது என கூறியுள்ளார்.