Nayanthara Issue : ராதா ரவி சர்ச்சையில் நடிகை நயன்தாரா பற்றிய உண்மைகளை போட்டுடைத்துள்ளார் கலா மாஸ்டர்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொலையுதிர் காலம். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
அதில் கலந்து கொண்டு பேசிய ராதா ரவி நயன்தாராவை கொச்சையாக விமர்சனம் செய்திருந்தார். இது பெரும் சர்ச்சைகளை சந்தித்திருந்தது. இதனால் ராதா ரவிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வந்தன.
இந்நிலையில் தற்போது கலா மாஸ்டர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நயன்தாரா – ராதா ரவி சர்ச்சை குறித்து பேசியுள்ளார்.
ராதா ரவி மதிப்பிற்குரிய ஒரு மனிதர். அவர் இப்படி பேசியது தவறு தான். நயன்தாராவை பற்றி இதுவரை எவ்வளவோ தவறான தகவல்கள் வந்துள்ளன. அப்படியிருந்தும் இதுவரை அவர் சிறப்பான இடத்தில் இருந்து வருகிறார்.
பொதுவாகவே நயன்தாரா நல்ல மனதுடையவர். ஒரு முறை என்னுடைய ஸ்டுடென்ட் ஒருவர் உதவி கேட்ட போது நயன்தாரா சற்றும் யோசிக்காமல் பணத்தை கொடுத்தார்.
இந்த சர்ச்சை குறித்து நான் ராதா ரவியிடம் பேசிய போது அவர் நான் விளையாட்டாக தான் பேசினேன். அது எவ்வளவு பெரிய பிரச்சனையாகும்னு எதிர்பார்க்கல என வருத்தப்பட்டார் என கூறியுள்ளார்.