சமந்தாவை பிரிந்த பிறகு பிரபல நடிகையுடன் இணைய உள்ளார் நடிகர் நாக சைதன்யா.
Nagachaitanya in Upcoming Movie Announcement : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனான இவர் தென்னிந்திய நடிகையான சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை முழுசாக நான்கு வருடங்கள் கூட நிலைக்கவில்லை.
சமீபத்தில்தான் இருவரும் தங்களது விவாகரத்தை அறிவித்து சட்டப்பூர்வமாக பிரிந்தனர். இவர்கள் விவாகரத்து அறிவித்த சமயத்தில்தான் நாக சைதன்யா நடிப்பில் லவ் ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து அவர் நடித்திருந்தார். ஆனால் விவாகரத்து சோகத்தில் அவரால் இந்த வெற்றியை கொண்டாட முடியவில்லை.
‘புதிய கோச்சர்’ டிராவிட், இந்திய அணியை மேலும் பலப்படுத்துவாரா? : காம்பீர் விளக்கம்
இந்த படத்தை தொடர்ந்து நாக சைதன்யா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மனம் மற்றும் சூர்யாவின் 24 படங்களை இயக்கிய விக்ரம்குமார் தான் இந்த படத்தை இயக்க உள்ளார்.
Maanaadu இசை வெளியீடு விழாவில் கூட்டத்தில் சிக்கிய சிம்பு – வைரலாகும் வீடியோ | #MaanaaduAudioLaunch
இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ள பிரியா பவானி சங்கர் தான் ஜோடி சேர்ந்து நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமந்தா உடனான விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.