தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

கல்யாணத்தை நிறுத்துவதற்கு ஒரு செம்ம ஐடியா கிடைச்சிருக்குடா என்று மினிஸ்டர் கலந்து கொள்ளும் மீட்டிங்க்கு சூர்யா குடித்துவிட்டு வருகிறார். உடனே மாதவி நீங்க பார்த்திருக்கிற மருமகள் நம்ம குடும்ப மானத்தையே கப்பல் ஏத்த போறாமா என்று ஒரு வீடியோவை காட்டுகிறார்.

அருணாச்சலம் சுதாகருக்கு பத்திரிக்கை வைக்க வர, பத்திரிக்கை வைக்கிறதுக்கு உங்க குடும்பத்தோட வருவீங்கன்னு பார்த்தா தோட்டக்கார குடும்பத்தோட வரீங்க என்று நக்கல் அடிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.