நந்தினியை திட்டிய சுந்தரவல்லி, கீழே விழுந்த சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 22-11-25
moondru mudichu serial today promo update 22-11-25

நேற்றைய எபிசோடில் சூர்யாவை சந்தோஷமாக நந்தினி பார்க்க வர சுந்தரவள்ளியை பார்த்து பின்னாலே வந்து விடுகிறார். எனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா நான் இவ்வளவு சொல்லியும் வருவ, இங்கிருந்து இடத்த காலி பண்ணு என்று திட்ட நான் ஒரே வாட்டி சூர்யா சார் பார்த்து விடுகிறேன் என்று சொல்ல மாதவி சுரேகாவும் வந்து நீ எதுக்கு மேல வந்த என்று கேட்க உன் புருஷனா விட்ருக்காரு என்று சொல்லி மாதவியை திட்டுகிறார். உடனே நந்தினி அழுது கெஞ்சி கேட்க சூர்யா முதல்ல உனக்கு யாரு என்று கேட்க அவரு எங்களோட குலதெய்வம் சாமி மாதிரி என்று சொல்ல சாமியை எப்போ ஒன்னா பாத்துக்கலாம் கிளம்பு என்று சொல்ல நந்தினி கெஞ்சி காலில் விழுந்து ஒரு ஓரமாய் இருந்து பார்த்துட்டு போயிடுறேன் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் என்று சொல்ல அப்போ வீட்டை விட்டு போயிடுறியா என்று கேட்கிறார்.

சரி நான் போயிடுறேன் என சொல்லிவிட்டு நந்தினி உள்ளே போகும்போது மாதவி தடுத்து நிறுத்துகிறார். இவ கத்தி கூச்சல் போட்டு சூர்யாவை எழுப்பிட்டா என்ன பண்ணுவீங்க வேண்டாம் என்று சொல்ல நந்தினி நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் என்று சொல்லியும் மாதவி பார்க்க விடாமல் தடுக்கிறார். மறுபக்கம் அசோகன் கீழே ரூமில் இருந்து கதவைத் தர மாதவி என்று சொல்லிவிட்டு கத்திக் கொண்டிருக்க மாதவி வந்து கதவை திறந்த உடன் அசோகன் உள்ளே இழுத்துச் செல்ல சுந்தரவல்லி கடுப்பாகிறார். உன்ன மேல காவலுக்கு இருக்க சொன்னா நீங்க என்ன பண்ற என்று கேட்க நீதானே என்ன கூட்டிட்டு வந்தேன் என்று சொல்ல சுந்தரவல்லி மாதவின் மீது சந்தேகப்படுகிறார். அசோகன் போதையில் உளறி கொண்டே இருக்க சுந்தரவல்லி கன்னத்தில் அரைகிறார்.

உடனே அசோகன் மேலே சென்று விட, சுந்தரவல்லி இனிமே மாப்பிள்ளை எல்லாம் அங்க காவல் காக்க வேண்டாம் நீயே பாரு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் நந்தினி சோகமாக இருக்க கல்யாணம் வந்து ஏமா கவலை படுற என்று கேட்க கால்ல கூட விழுந்துட்டா என அடிங்க அடி கூட வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டேன் ஆனா என்ன பாக்க விடமாட்டேங்குறாங்க ஒரு தடவை காட்டுங்க நான் வீட்டை விட்டு கூட போயிடுறேன்னு சொல்லிட்ட என்று சொன்ன நீ இன்னொருவாட்டி இது மாதிரி சொல்லாதம்மா அவங்களுக்கு இன்னும் வசதியா போயிடும் என்று சொல்லுகிறார். அவரு எனக்காக எவ்வளவு விஷயம் செஞ்சிருக்காரு எனக்காக அவர் குடும்பத்தையே பகச்சிக்கிட்டே இருக்காரு நாங்க யாருங்க அண்ணா அவருக்கு அவங்க வீட்டில தோட்டத்துல வேலை பாக்குறவங்க அவ்வளவுதான் கல்யாணம் ஆன புதுசுல எனக்கு எவ்வளவு நல்லா பாத்துக்கிட்டாரு என் குடும்பத்தை காப்பாத்தி இருக்காரு எல்லாத்துக்குமே காரணம் சூர்யா சார் தான் என்று சொல்லுகிறார்.

அதையெல்லாம் விடுங்க இப்போ எனக்கு அம்மா போட்டப்போ அவரு பிச்சை எடுத்தாரு இதெல்லாம் யாருக்காக அவர் பண்ணனும்னு சொல்லுங்க என்ற சொல்லி வருத்தப்பட கல்யாணம் நந்தினிக்கு ஆறுதல் சொல்லுகிறார். மறுபக்கம் அசோகனை சுந்தரவல்லி கூப்பிட்டு திட்டிக் கொண்டு இருக்கிறார்.

இந்த மாதிரி பண்ற சின்ன சின்ன விஷயம் கூட அந்த பிளான கெடுத்து விடும் என்று சொல்லி திட்டிக் கொண்டிருக்க மாதவி வர என்ன சொல்றாருமா என்று கேட்க இவர் மேலே இருந்த நம்பிக்கையை எனக்கு போயிடுச்சு என்று மாதவி சொல்லுகிறார். உடனே அப்பா எப்ப வருவாரு என்று கேட்க இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடுவாரு என்று சொன்னவுடன் உடனே அப்பா வரத்துக்குள்ள இவள துரத்திவிட்டாகணும் என்று சொல்லுகிறார் அதுவும் இல்லாம விஜி கூட்டிட்டு வந்து சூர்யா கிட்ட நந்தினி இங்க இல்லன்னு சொன்னா அவன் கண்டிப்பாக நம்புவான் என்று சொல்ல சுந்தரவல்லியும் யோசிக்கிறார். மறுபக்கம் நந்தினி வெளியில் உட்கார்ந்து கொண்டிருக்க, கல்யாணம் வந்து பேசுகிறார் சூர்யா சார் இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருப்பாரு என்று கேட்க அவர் என்ன தூங்கிட்டு தான் இருப்பாரு என்று சொல்ல எவ்வளவு துரு துருனு இருப்பாரே இப்படி படுக்க வச்சுட்டாங்களே என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் நம்ம இங்கதான் இருக்கோன்னு சூர்யா சரக்கு எப்படி தெரியப்படுத்துவது என்று கல்யாணத்திடம் நந்தினி கேட்க மறுபக்கம் சூர்யா கண் விழித்து நந்தினி தொங்கவிட்ட ஸ்லைட்டை பார்க்க அவருக்கு மயக்கமாக இருப்பதால் எழுத்துக்கள் சரியாக தெரியாமல் இருக்கிறது. மறுபக்கம் சுந்தரவல்லி நந்தினி இடம் இந்த குடும்பத்தையும் என் பையனையும் விட்டுட்டு எங்கேயாவது போய் தொலையறியா என்று திட்டிக் கொண்டிருக்க மறுப்பக்கம் சூர்யா நந்தினியை கூப்பிட்டுக்கொண்டு கட்டிலில் இருந்து கீழே விழுந்து விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 22-11-25
moondru mudichu serial today promo update 22-11-25