குடும்பத்தினருடன் சந்தோஷமாக விளையாடும் நந்தினி, சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா சுதாகர் ஆட்களை அடிவெளுத்து வாங்க நந்தினி சிங்காரத்தை அவிழ்த்து விடுகிறார். உடனே சூர்யா சுதாகரை கழுத்தைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வந்து தள்ள ஊர் மக்கள் வேடிக்கை பார்க்கின்றனர். பிறகு சுதாகர் ஆட்களை அடுக்க சிங்காரம் குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர். சுதாகர் எவ்வளவு நாள் இவள்களுக்கு சப்போர்ட் பண்ணுவ என்று கோபப்பட சூர்யா நான் இருக்கிற வரைக்கும் உன்னால ஒன்னும் பண்ண முடியாது என்று அடித்து ஓட விடுகிறார். சுதாகர் சுந்தரவல்லிக்கு போன் போட்டு என்கிட்ட ஒன்னு சொல்லி உங்க பையன் கிட்ட ஒன்னு சொல்லி அனுப்புறிங்களா, உங்க பையன் என் மேலேயே கைய வச்சுட்டான் அவனை அப்பவே அறுத்து போட்டு போயிருப்பேன் உங்களுக்காக தான் அமைதியா இருக்கேன் என்று சொல்லுகிறார்.
நீங்க அவங்கள சென்னைக்கு ஓட விடுங்க அது மட்டும் போதும் என்று சொல்ல அப்போ என்னோட பழியை எப்படி தீர்த்துக்கிறது என்று கேட்க அதை எல்லாம் சேர்த்து நான் பாத்துக்குறேன் அவங்க குடும்பத்தை கதற விடுற என்று சொல்ல, சொல்றதெல்லாம் சரி செஞ்சுடுவீங்களா என்று கேட்க உங்களுக்கு வெறும் கோவம் மட்டும்தான் எனக்கு ஒண்ணுமே இல்லாதவ எங்க வீட்டு மருமகளா என் கண்ணு முன்னாடி சுத்திக்கிட்டு இருக்கா அவளை ஓட ஓட விரட்டணும் என்று சொல்ல அப்போ நான் என்ன பண்ணனும் என்று கேட்க அவனே அந்த குடும்பத்தை சென்னைக்கு கூட்டிட்டு வருவான் அப்படி இல்லன்னா என்ன பண்ணனும்னு நான் சொல்றேன்னு சொல்லி போனை வைக்கிறார்.
நந்தினி சிங்காரத்திடம் ஏன் சொல்லவில்லை என்று கோபப்பட மன்னிச்சிடுமா என்று சொல்லுகிறார். இது எல்லாத்துக்கும் காரணம் ரஞ்சிதா தான் என சூர்யா பாராட்டுகிறார். பிறகு குடும்பத்தினர் அனைவரும் சூர்யாவிற்கு நன்றி சொல்ல அதை எல்லாம் வேண்டாம் என சொல்லுகிறார். நந்தினி எங்களுக்கு உதவி செய்ய வந்து உங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று சொல்லுகிறார். என் மேல இருக்குற கோவத்துல உங்களை ஏதாவது பண்ணா உங்க குடும்பத்தோட முகத்துல நான் எப்படி முழிப்பேன் தயவுசெய்து இங்க இருந்து நீங்க போயிடுங்க என்று சொல்ல, அப்போ நான் போனா சுதாகர் வரமாட்டானா என்று கேட்க அதை நான் பார்த்துக்கிறேன் சார் என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் போன் பண்ண சூர்யா நடந்த விஷயங்களை அவரிடம் சொல்லுகிறார். இனிமே அவன் பிரச்சனை பண்ண மாட்டான் என்று சொல்ல இதுக்கு மேல தான் அதிகமா பண்ணுவான் இதுக்கு அப்புறம் ஒருத்தர் கூட அங்க இருக்க வேணாம் எல்லாரையும் கூட்டிட்டு சென்னைக்கு வா என்று சூர்யாவிடம் சொல்கிறார்.
ஆனால் நந்தினி எல்லாருமா என்று கேட்க ஆமா எல்லாரும் கிளம்பி வாங்க எதுவா இருந்தாலும் நேர்ல பேசிக்கலாம் என்று சொல்ல, திடீர்னு போன் பண்ணி கிளம்பலாம்னு சொன்னா எப்படி ஐயா என்று கேட்க நீ எதுவும் பேசாதம்மா சூர்யா சொல்றத மட்டும் கேளு என்று சொல்லுகிறார். இங்க பாருங்க நந்தினி சென்னையில நம்ம கண்ணு எதிரில் குடும்பம் இருந்தால் எந்த பிரச்சனையும் வராது எமோஷனலா யோசிக்கிறது விட பிராக்டிக்கலா யோசி இந்தப் பிரச்சனைக்கே ரஞ்சிதாவிட முகம் மாறி இருக்கு இன்னொரு பிரச்சனையா அவ தாங்குவாளா என்று கேட்டுவிட்டு அனைவரையும் தயாராக சொல்லி சென்னைக்கு அழைத்துச் வந்து ஒரு வீட்டிற்கு கூட்டி செல்கிறார். யார் வீடு என்று தெரியாமல் நந்தினி குடும்பத்தினர் தயங்கி நிற்க நந்தினி அழைத்துச் செல்கிறார். பிறகு அனைவரையும் வீட்டை சுற்றி பார்க்கச் சொல்ல அருணாச்சலம் வந்து வீடு புடிச்சிருக்கா அம்மா புடிக்கலனா வேற வீடு கூட பார்க்கலாம் என்று கேட்கிறார். உடனே நந்தினி அருணாச்சலம் காலில் விழுந்து நீங்களும் சூரியா சார் செஞ்ச உதவிக்கு எங்க குடும்பம் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியல என்று சொல்ல சூர்யா இது நடிப்பு டாடி ரொம்ப நடிக்கிறா நம்பாதீங்க என்று சொல்ல, இல்ல சார் என்று நந்தினி ஆரம்பிக்க சும்மா சும்மா சூர்யா சார் காப்பாற்றினார் சொல்ற ஆனா ஒரு தடவையாவது என் காலில் விழுந்தையா என்று கிண்டல் அடிக்க அனைவரும் சிரிக்கின்றனர்.
உடனே சிங்காரம் நீங்க செஞ்ச உதவிக்கு காலம் பூரா உங்க காலடியிலே இருப்போம் தம்பி என்று சொல்ல நான் சும்மா சொன்னேன் என்ற சூர்யா சொல்லுகிறார். அப்படியெல்லாம் பேசாத சிங்காரம் நீ உன் பொண்ணு கொடுத்து இருக்க அவன் உன்னோட மாப்பிள்ளை நீ என்னோட சம்பந்தி என்று சொல்ல அப்படி எல்லாம் சொல்லாதீங்க எப்பவுமே நாங்க உங்களோட வேலையாளி ஆளுதான் என்று சொல்லுகிறார். அதுவுமில்லாம எங்க குடும்பத்துக்கு உயிர் பிச்சை கொடுத்தவங்க நீங்க எங்க குலசாமியை நீங்கதான் என்று சொல்லுகிறார். சூர்யா சார் மட்டும் வரலைன்னா சுதாகர் அவன் ஆட்கள் எங்களை கொண்ணு கூட போட்டு இருப்பாங்க அப்பயும் நான் சூர்யா சார போங்கன்னு தான் சொன்னேன், கஷ்டப்படுத்தினால் அதையும் தாண்டி எங்களுக்கு சூர்யா சார் உதவி பண்ணாரு இங்க வந்தா நீங்க எவ்ளோ பெரிய வீடு பார்த்து வச்சிருக்கீங்க நீங்க ரெண்டு பேரும் இல்லன்னா நாங்க குடும்பத்தோட நடுத்தெருவுலதான் இருந்திருக்கணும் ரொம்ப நன்றி ஐயா என்று சொல்ல போதுமா போதும் மாத்தி மாத்தி எதுக்கு நன்றி சொல்லிக்கிட்டு இருக்கீங்க என்று அருணாச்சலம் கேட்கிறார்.
ஆயிரம் நன்றி சொன்னாலும் உங்க குடும்பம்னு தள்ளி தானே வச்சிருக்கீங்க என்று சொல்ல இருந்தாலும் அம்மாவுக்கு தெரிஞ்சா பிரச்சனையாகும் என்று சொல்ல சூர்யா தாய்க்குலம் தானே நான் பாத்துக்குறேன் என்று சூர்யா சொல்ல அருணாச்சலம் வீட்டைச் சுற்றி பார்க்க சொல்லுகிறார். சுதாகர் போன் போட்டு சுந்தரவல்லி இடம் நீங்க எது ஆசைப்பட்டீங்களோ அது நடந்துருச்சு அண்ணியாரே என்று சொல்லுகிறார். உங்க மகன் சூர்யா தோட்டக்காரியையும் குடும்பத்தையும் அழச்சிகிட்டு சென்னைக்கு கிளம்பிட்டாரு என்று சொல்ல சுந்தரவல்லி ரொம்ப சந்தோஷப்படுகிறார். இப்ப சந்தோஷமா என்று கேட்க சந்தோஷமா இதுக்கு தான் நான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன் என்று சொல்லுகிறார்.
ஏதாவது ஒன்னுனா சொல்லுங்க நான் சென்னைக்கு கிளம்பி வரேன் என்று சொல்ல கண்டிப்பா ஒரு நாள் உங்க உதவி தேவைப்படும் அன்னைக்கு கூப்பிடுறேன் என சொல்லுகிறார். அவ உங்களுக்கு மட்டும் எதிரி இல்ல எனக்கும்தான் எதிரி அவளை வீட்டை விட்டு ஓட ஓட துரத்தி அடிக்கணும் எல்லாமே ஒரு நாள் நடக்கும் என சொல்லி போனை வைக்கிறார். பிறகு அருணாச்சலம் வீடெல்லாம் புடிச்சிருக்கா என்று கேட்க பிடிச்சிருக்கு என்று சொல்லுகின்றன. என்ன உதவினாலும் கேளு சிங்காரம் என்று சொல்ல, சூர்யா இந்த நந்தினி எந்த உதவியும் கேட்க கூடாது என மிரட்டுவா டாடி என்று சொல்ல அருணாச்சலம் என்ன அனுபவம் பேசுதா சூர்யா என்று கிண்டல் அடிக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
என்று வெளியான ப்ரோமோவில் நந்தினி குடும்பத்தினருடன் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்க சூர்யா வந்து இது என்ன கேம் என்று கேட்கிறார் நந்தினி ஆடுபுலி ஆட்டம்னு சொல்லுவாங்க சார் என்று சொல்ல இதில் யார் ஆடு யாரு புலி என்று கேட்க புனிதா அப்பா ஆடு அக்கா புலி என்று சொல்லுகிறார் உங்களுக்கு இந்த ஆட்டம் பத்தி தெரியாதா சார் என்று கேட்க பெயர் கேள்விப்பட்டிருக்கேன் ஆனா ரூல்ஸ் எல்லாம் எதுவும் தெரியாது என்று சொல்ல இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் வாங்க வந்து உட்காருங்க என்று சொல்லி உட்கார வைக்கிறார் புனிதா.
ரஞ்சிதா அக்கா தான் எப்பவுமே ஜெயிப்ப அப்பா ஜெயிக்க மாட்டார் என்று சொல்ல புனிதா அப்பா ஜெயிப்பாரு நான் உனக்கு சப்போர்ட் பண்றேன்பா என்று புனிதா சொல்ல அது எப்படி நந்தினி தான் சப்போர்ட் பண்ணுவ நந்தினி பக்கம் தான் என்று சொல்லுகிறார் அம்மாச்சி. நம்ம யாருக்கு சப்போர்ட் பண்றது என்று ரஞ்சிதாவிடம் சூர்யா கேட்க அப்படியெல்லாம் அவசரப்பட்டு முடிவெடுத்திடக்கூடாது நான் கமெண்டரி சொல்ற நீங்க கை தட்டுங்க என்று சொல்ல இருவரும் விளையாடிக் கொண்டிருக்க கொஞ்ச நேரம் இரண்டு பேருக்கும் கை தட்டுங்கள் அப்புறம் யார் ஜெயிக்கிற மாதிரி இருக்காங்களோ அவங்க கூட சேர்ந்து விடுவோம் என்று சொல்ல சூர்யா சூப்பர் என்று சொல்லுகிறார்.
நந்தினி அதுக்கு முதல்ல விளையாட தெரிஞ்சிருக்கணும் என்று சொல்ல அதுக்கு என்ன தம்பிக்கு நான் சொல்லி தரேன் என்று விளையாட்டை சூர்யாவிற்கு சொல்லி புரிய வைக்கிறார் சிங்காரம் என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
