முகேன் மற்றும் லாஸ்லியா குறித்து அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மோகன் வைத்யா.
Mogan Vaidhya Interview : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது ஆளாக வெளியேற்றப்பட்டவர் மோகன் வைத்யா.
பெண்களை அடிக்கடி கட்டி அணைத்து முதல் கொடுத்து பெரும் சர்ச்சைகளில் சிக்கி கொண்ட இவர் வெளியேறியதும் பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
இந்த வார பிக் பாஸில் வீட்டில் இருந்து வெளியேறுபவர் இவர் தான்.!
அப்படியான பேட்டி ஒன்றில் முகேனுக்கு சிகிரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளது. ஒரு முறை எனக்கும் அவருக்கும் ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டது. அப்போது நான் கோபமாக பேசி விட்டேன்.
அதன் பிறகு அவர் ஸ்மோக்கிங் ரூம் சென்று சிகிரெட் பிடித்து விட்டு வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் லாஸ்லியா குறித்து கேட்டதற்கு மரியாதை தெரியாத பெண் எனவும் குறிப்பிட்டுள்ளார்.