Modi With Arun Jaitley Family :
டெல்லி: மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த 9 ஆம் தேதி அன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் சிகிச்சை பலனின்றி கடந்த 24-ஆம் தேதி அன்று அருண் ஜேட்லி காலமானார். அருண் ஜேட்லி உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.
அதை தொடர்ந்து, கடந்த 25-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு யமுனை நதிக்கரை மயானத்தில் எரியூட்டபட்டது.
இதற்கிடையே, பிரான்ஸ் நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள சென்ற பிரதமர் மோடி, அருண் ஜெட்லி மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்தார்.
இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பு தந்த தலைவரின் மறைவு கவலை அளிக்கிறது என கூறி வருத்தம் தெரிவித்தார்.
தோனிக்கு இப்படி ஒரு ரசிகரா? வியந்த CSK உரிமையாளர்!
பல ஆண்டுகளாக எனக்கு நெருக்கமாக இருந்த மிகச்சிறந்த நண்பரான, அருண் ஜெட்லியை இழந்து விட்டேன். ஒவ்வொரு பிரச்னைகளைப் பற்றி அவர் அறிந்து வைத்திருக்கும் அறிவு பிரம்மிக்கத்தக்கது. அவர் நன்றாக வாழ்ந்தவர்.
இனிமையான நினைவுகளை நம்மிடம் விட்டுச் சென்று, நம்மை விட்டு பிரிந்துள்ளார். பாஜகவுக்கும், அருண் ஜெட்லிக்கும் இருக்கும் உறவு பிரிக்க முடியாது.
எமர்ஜென்ஸி காலத்தின்போது வீரம் மிக்க மாணவர் தலைவராக ஜனநாயகத்திற்கு அருண் ஜெட்லி குரல் கொடுத்தார். இவ்வாறு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பிய பிரதமர் மோடி, அருண் ஜெட்லியின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அருண் ஜெட்லியின் இல்லத்திற்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.