Mahendra Singh Dhoni – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியிக்கு பலதரபினர் ரசிகர்களாக உள்ளார் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.
அதே சமயத்தில் தோனியின் ரசிகர்கள் தோனியின் மீது உள்ள பாசத்தை பல்வேறு விதங்களில் வெளிபடுத்துவார்கள். அப்படி வெளிபடுத்தும் புகைப்படம், காணொளி போன்றவை சமூக வலைத்தளங்களில் பெரிதாக பேசபடுவதும் உண்டு.
அந்த வகையில் தற்போது தோனியின் ரசிகர் ஒருவரின் செயலால் சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதியுடன் ஆச்சர்யத்துடனும் பதிவிட்டு உள்ளது.
தமிழக ரசிகர்கள் தோனியை “தல” என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். அதே போல கேரளா ரசிகர்கள் தோனிக்கு பெரிய “கட் அவுட்“ வைத்து அசத்துகின்றனர்.
இப்படி ரசிகர்கள் தங்களில் அன்பை வெளிக்காட்டி வரும் நிலையின், ஐபிஎல் போட்டியின் போது தோனியை காண்பதற்காகவே போட்டிக்கு வருவதும் உண்டு.
இந்த நிலையில், லாஸ் எஞ்சல்சில் உள்ள தோனி ரசிகர் ஒருவர் தனது காரின் நம்பர் ப்ளேட்டில் “ MS Dhoni “ என்று எழுதி உள்ளார்.
இதனை சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. மேலும், அதில் சிறிதாக சொப்பன சுந்தரி என்றும் எழுதி இருக்கின்றதாம்.
ஐபிஎல் ஏலம் முடிவடைந்த நிலையில், சிஎஸ்கே அணியில் இருக்கும் தோனி, இது வரை 3 முறை கோப்பையை சிஎஸ்கே-க்கு வெற்று கொடுத்து உள்ளார்.
இந்த முறையும் தோனியே கேப்டனாக இருப்பார் என்றும், கோப்பையை சிஎஸ்கே வெல்லுமா என்றும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.