MBBS Arrears Exam Special Update : MBBS முதலாண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான அரிய தேர்வுகளை தங்களது வசதிக்கேற்ப அங்கீகரிக்கப்பட்ட எந்த அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் எழுதலாம் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன்வெளியிட்டதாவது: MBBS முதல் இறுதியாண்டு அறிய திங்கட் திங்கட்கிழமை ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்குகின்றன.
தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேர்வு எழுதலாம்.
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு மற்றும் கல்லூரி அடையாள அட்டையை ஆவணங்களாக காண்பித்து எங்கிருந்து வேண்டுமானாலும் அவர்கள் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.