Maanadu Shooting Update After Lockdown
Maanadu Shooting Update After Lockdown

மாநாடு ஷூட்டிங் குறித்து சிம்பு எடுத்த அதிரடி முடிவு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Maanadu Shooting Update After Lockdown : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி படத்தை தொடங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் இப்படம் கைவிடப்பட்டது.

அதன் பின்னர் தயாரிப்பாளர் சங்கம் மூலமாக இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் சிம்புவின் அம்மாவான உஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என முடிவு செய்யப்பட்டது.

இந்த கலந்துரையாடலுக்கு பிறகு திட்டமிட்டபடி படப்பிடிப்புகள் தொடங்கியது. சிம்புவும் உற்சாகமாக படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வந்தார். இப்படியான நிலையில் தான் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள், கொரானா சிகிச்சையின் அடுத்த கட்டம் – தமிழக முதல்வரின் அதிரடித் திட்டங்கள்!

இந்த நிலையில் தற்போது மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து நடிகர் சிம்பு மாநாடு படத்தின் தயாரிப்பாளரை தொலைபேசி வாயிலாக அழைத்துள்ளார்.

மேலும் படப்பிடிப்பை தொடங்கலாம் நான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக வெகு விரைவில் மாநாடு படத்திலிருந்து ஒரு சூப்பரான அப்டேட்டை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.