லியோ இன்டர்வெல் இப்படி தான் இருக்கும் என பேசியுள்ளார் தயாரிப்பாளர் லலித் குமார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் எப்படி இருக்கு என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
படம் பற்றி அப்டேட் எதுவும் வெளியாகாதா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தின் இன்டர்வெல் குறித்து பேசியுள்ளார்.
அதாவது “திரைப்படம் சூப்பரா வந்துருக்கு. படத்தின் இண்டர்வல் கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் Goosebumps moment-ஆக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இண்டர்வல் காட்சி மொத்தம் 8 நிமிடம். கண்டிப்பாக அதை திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” என கூறியுள்ளார்.
இந்த தகவல் விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.