கமலுக்கு உயரிய விருது; பிரகாஷ்ராஜ் தலைவராக தேர்வு: முழு விவரம்..

Web Ads

கமல்ஹாசனுக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

திரையுலகில் கமல்ஹாசன் பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக, அவருக்கு அல்பர்ட்டா இந்திய திரைப்பட விழா 2025 நிகழ்ச்சியில், ‘கோல்டன் பீவர் அவார்ட்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள சாதனைகளையும், பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் கனடாவில் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.

தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் எனப் பல விருதுகளைக் குவித்துள்ள கமல்ஹாசன், 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ளார். வெறும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, சமூகம் சார்ந்த விழிப்புணர்வையும், ஆழமான கருத்துகளையும் தாங்கி நிற்பதால், அவர் சினிமாவில் தனித்துவமான கலைஞராக கமல்ஹாசன் திகழும் நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது, அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது

Web Ad 2

இந்நிலையில், 2024 ஆம்ஆண்டின் கேரள மாநில திரைப்பட விருதுகளுக்கான நடுவர் குழுவின் தலைவராக நடிகரும் இயக்குநருமான பிரகாஷ் ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே நடுவர் குழுவில் ரஞ்சன் பிரமோத், ஜிபு ஜேக்கப், பாக்யலட்சுமி, காயத்ரி அசோகன், நிதின் லூகாஸ் மற்றும் சந்தோஷ் எச்சிக்கானம் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், தலைவராக பிரகாஷ் ராஜ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

kamal receives golden beaver award on stage in canada
kamal receives golden beaver award on stage in canada