ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியிட்டுள்ளார் அனிருத்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.
இந்த படம் வெகு விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் பர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நெல்சன் அனிருத்திடம் பாட்டு தாரேன்னு சொன்னீங்களே எங்க? எவ்வளவு நாள் கழிச்சு கேட்டாலும் நீங்க தான் மியூசிக் என கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு இசையமைப்பாளர் அனிருத் இன்னும் நான்கு நாட்களில் என்பது போல ரஜினிகாந்த் ஸ்டைலில் பதில் அளித்துள்ளார்.