தளபதி விஜயிடம் இரண்டாவது நாளாக தொடர் விசாரணை நடந்து வருகிறது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்க AGS எண்டெர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
படம் ரூ 300 கோடி வசூலை செய்து தயாரிப்பு நிறுவனத்திற்கு நல்ல லாபம் கொடுத்ததாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்களே கூறி வந்தார்.
இந்நிலையில் நேற்று திடீரென AGS நிறுவனங்கள், உரிமையாளர் வீடுகள் என கிட்டத்தட்ட 20 இடங்களில் IT அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பங்கேற்று கொண்டிருந்த விஜயிடமும் விசாரணை நடத்த தொடங்கினர், நேற்று மாலை தொடங்கி விசாரணை தற்போது வரை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து இதுவரை கணக்கில் வராத ஆவணங்கள், தங்கள், வெள்ளி உட்பட ரூ 25 கோடி பணமும் சிக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் எந்தெந்த இடங்களில் எவ்வளவு சிக்கியது? விஜய் வீட்டில் சிக்கியது என்ன? என்பது குறித்த விவரங்கெல்லாம் வெளிவரவில்லை.