Indian Team coach Praised For Dhoni :
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை கூட்டிச் சென்ற பெருமை தோனியையே சேரும்.
ஆனால் எவ்வளவு தூரம் போராடினாலும் அப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.
இதில் தோனியின் ரசிகர்கள் அழுது தம் ஏமாற்றத்தைப் பதிவு செய்தனர். இந்நிலையில் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தோனியை புகழ்ந்துள்ளார்.
ஆசியக் கால்பந்து போட்டியில் இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்து நாட்டில் வரும் 30 ஆம் தேதி உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது.
கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி அங்கு சென்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் பயிற்சி மேற்கொண்டுள்ளது. அதற்கு ஏற்ப இன்று கோலி தலைமை கொண்ட இந்திய இங்கிலாந்துக்கு பறந்தது.
இங்கிலாந்துக்கு செல்லும் முன் பேட்டி அளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் :
இதுகுறித்த செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் தோனியை பற்றி கூறி உள்ளார்.
தோனி, ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் கொண்டவர்.வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் நிச்சயமாக முக்கிய பங்கு வகிப்பார் . தோனிக்குச் சமமாக வேறொரு வீரர் இல்லை என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், இந்திய அணியின் கேப்டன் கோலி தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு மிகவும் உதவும் என்றும் அவர் அணியில் இருப்பது எனக்கு கூடுத்த உற்சாகமாக உள்ளது,
என்றும் நிச்சயம் கோப்பையை வெல்ல கடும் போட்டி இருக்கும் அதனை அனைத்தும் முறியடித்து கோப்பையை வென்று இந்திய ராணுவத்திற்கு சமர்பிப்போம். என்று கோலி தெரிவித்தார்.