Indian cricket coach Ravi Shastri :
உலகக் கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறினாலும், பிசிசிஐ மற்றும் விராட் கோலியின் நம்பிக்கையை பெற்றுள்ளார் ரவி சாஸ்திரி ,
அணியின் சில வீரரகளும் ரவி சாஸ்திரியின் செயல்பாட்டில் விருப்பம் தெரிவித்து, மீண்டும் அவர் தலைமை பதிவியில் தொடர வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
“ரவி சாஸ்திரி அணிக்காக சிறந்த விஷயங்களை மட்டுமே செய்துள்ளார்” பிசிசிஐ அதிகாரி என்டிடிவியிடம் தெரிவித்தார்.
கத்தரிக்காய் நல்லதுதான், ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக சாப்பிடக் கூடாதாம், தெரிந்து கொள்ளலாமா?
“அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன்னாகவும், இங்கிலாந்து வீழ்த்துவதற்கு முன்பு ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஒரு மோசமான போட்டி ஒரு பயிற்சியாளரை சரியானவர் இல்லை என்று சொல்ல முடியாது.
அவர் மீண்டும் விண்ணப்பித்தால், நிச்சயம் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்றார்.
பிசிசிஐயிடம் இருந்து 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் சாஸ்திரி, பயிற்சியாளர் பதிவிக்கு விண்ணப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவுலிங் பயிற்சியாளர் பரத் அருணும் அந்த பதவிக்கு விண்ணப்பிக்க உள்ளார்.
விண்னப்பிக்க கடைசி நாள் ஜூலை 30, 2019, மாலை 5 மணி என்று கூறப்பட்டுள்ளது.