India A team – இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணிகாக களமிறங்கிய ராகுல் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் பாண்டியா, ராகுல் ஆகியோர் பெண்கள் தொடர்பான கருத்தை கூறியதாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
அந்த கருத்துக்கு பலதரபினரும் எதிர்பு கூறவே, ஆஸ்., போட்டியில் இருந்து கலந்து கொள்ளாமல் உடனே நாடு திரும்ப பிசிசிஐ உத்தரவிட்டது.
இருவர் மீதான விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்வதாக பிசிசிஐ தெரிவித்தது.
இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 5-ஆம் தேதி வழக்கை தள்ளிவைத்தது. இதனால், ராகுல் மற்றும் பாண்டியா இருவரின் மீதான தடையை நீக்கியது பிசிசிஐ.
தடை நீங்கியதும் பாண்டியா நியூ., அணிக்கு எதினாரா போட்டியில் இந்திய அணியிலும் மற்றும் ராகுல் இந்தியா-ஏ அணியிலும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து ராகுல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பாண்டியா நியூ., அணிக்கு எதிராக விளையாடி வருகிறார்.