நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.. நடிகை தேவயானி ஓபன் டாக்.!!

நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி எனக் கூறியுள்ளார் தேவயானி.

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து சில தொடர்களிலும் நடித்த இவர் மீண்டும் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3 பிஎச்கே என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேவயானி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றை பேசி இருப்பது தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதாவது நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்றும் திரை உலகில் எனக்கு நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தது இதுவரைக்கும் ரசிகர்கள் என்ன மனசுல வச்சிருக்காங்க என்றால் அதற்கு முக்கிய காரணம் நான் நடிச்ச கேரக்டர் தான் கூறியுள்ளார்.
இது மட்டுமில்லாமல் தற்போது இருக்கும் மாணவிகள் மனம் திறந்து பேச வேண்டும் எந்த காலத்திலும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். எது நடந்தாலும் அப்பா அம்மா கிட்ட சொல்லணும், அப்பா அம்மாவும் குழந்தைங்க கிட்ட டைம் ஸ்பென்ட் பண்ணனும் என்று சொல்லி இருக்கிறார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
