Global Goalkeeper Award :
நியூயார்க்: பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டது.
அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் மோடியை இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பிரதமர் மோடி, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் அதுமட்டுமின்றி, இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனம் சார்பில் குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டது.
மேலும் விருது பெற்று கொண்ட மோடி பேசுகையில், “எனக்கு வழங்கப்பட்ட இந்த கவுரவம் என்னுடையது இல்லை. தங்களது அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா கனவு திட்டத்தினை செயல்படுத்தி வருவதுடன் அதனை நிறைவேற்றிய கோடிக்கணக்கான இந்தியர்களையே சாரும்” என்று கூறினார்.
மேலும் இந்த நாட்டின் ஏழை மக்கள் மற்றும் பெண்களுக்கு பலனளிக்கும் வகையில் இத்திட்டம் அமைந்தது.
கடந்த 5 வருடங்களில் 11 கோடிக்கும் கூடுதலான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் கிராமப்புற சுகாதாரம் மேம்பட்டு உள்ள நிலையில், இத்திட்டத்தால் குழந்தைகளுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் குறைந்துள்ளன.
மேலும் தூய்மை இந்தியா திட்டத்தால், பெண்களின் உடல் எடையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளதாக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவன அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது என்று மோடி கூறினார்.