
முதல் ஆளாக பைனலுக்கு சென்றுள்ளார் சரிகமப லிட்டில் சாம்ஸ் போட்டியாளர் ஒருவர்.
தன்னைச் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ சரிகமபா லிட்டில் சாம்ஸ்.

அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, அபிராமி ஆகியோர் நடுவர்களாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.
கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஓல்ட் ஈஸ் கோல்ட் ரவுண்ட் நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு போட்டியாளர் நேரடியாக பைனலுக்கு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம் தனது மெல்லிய குரலில் நடுவர்கள் அனைவரையும் கவர்ந்த ரிக்ஷிதா தான் நேரடியாக பைனலுக்கு சென்ற முதல் போட்டியாளர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பு குறித்த ஜீ தமிழின் பதிவு இதோ