அனைவரும் ரசிக்கும் ஒரு கதை: ரஜினி அப்டேட்ஸ், வைரல்..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 என தொடர்ந்து ஆக்‌ஷன் கதைக்களத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஃபீல் குட் மூவி செய்ய விரும்பி, கதை தேடும் படலத்தில் இறங்கினார்.

அவ்வகையில், இளம் இயக்குநர்கள் நித்திலன், ராம்குமார் பாலகிருஷ்ணன், சிபி சக்கரவர்த்தி ஆகியோரிடம் கதை கேட்டார். இதில், யாரும் எதிர்பாராத விதமாக சிபி சொன்ன கதையை ரஜினி தேர்வு செய்துள்ளார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இச்சூழலில் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட நாட்களில் ரஜினிகாந்த் வீட்டுக்கு ரசிகர்கள் வருவது வழக்கம். அதன்படி பொங்கலை முன்னிட்டு அவருடைய போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு ஏராளமான ரசிகர்கள் கூடினர். அவர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இச்சூழலில் ரஜினிகாந்த் தெரிவிக்கையில்,

Web Ad 2

‘இந்த பொங்கல் விவசாயிகளுக்கான பொங்கல். விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோஷமாக இருந்தால் தான் மற்றவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும்’ என்றார்.

மேலும், ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு நடிக்கும் படம் பற்றித் தெரிவிக்கையில், ‘சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கும் படம் ஏப்ரலில் தொடங்கும். அது பொழுதுபோக்குடன் கூடிய கமர்ஷியல் படமாக இருக்கும்’ என கூறியுள்ளார். ரஜினி சொன்ன அப்டேட் தற்போது வைரலாகி வருகிறது. எனவே, தலைவர்-173 படம் ரசிகர்களுக்கான படமாக மட்டும் இல்லாமல், அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ever green story about in rajinikanth speech
ever green story about in rajinikanth speech