தோற்றுப் போய் உட்கார்ந்த குணசேகரனிடம் ஈஸ்வரி சவால் விட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஈஸ்வரி ஜனனியிடம் தர்ஷினி ஜீவானந்தம் கூட போய் சேர்ந்துட்டா இப்போ ஸ்போர்ட்ஸ்க்கு கிளம்பி போயிட்டு இருக்காளாம் என்று சொல்கிறார்.
அடுத்ததாக கதிர் போனை போட்டு போன விஷயம் என்னாச்சு என்று கேட்க ரேணுகா விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு சந்தோஷப்படுகிறார். அடுத்து தோத்து போய் துவண்டு கிடக்கும் குணசேகரனை பார்த்து ஈஸ்வரி குணசேகரன் என்ற பொய் பிம்பத்துக்கு பயந்து கிடந்த காலமெல்லாம் பேச்சு இனிமே எங்களுக்காக வாழப் போறோம் என்று பதிலடி கொடுக்கிறார்.
ஜனனி உங்களால இனி எதுவும் பண்ண முடியாது எங்களை ஜெயிக்கவே முடியாது என சவால் விடுகிறார்.