கரிகாலனால் அம்பலமாகிவிட்டது குணசேகரனின் திட்டம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆளாளுக்கு குணசேகரனை எதிர்த்து பேச இந்த வீட்டில் எனக்கு மரியாதை குறைஞ்சுகிட்டே வருது என குணசேகரன் கோபப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வேண்டும். அதாவது எஸ் கே ஆர்-ன் மனைவி சாருபாலா குணசேகரன் வீட்டுக்கு வந்திருக்க அப்போது குணசேகரன் கடந்த முறை நீங்க வந்திருந்த போது என்னென்னமோ பேசி விட்டேன். மனசு நெருடலா இருந்தது என சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.
இந்த நேரத்தில் ஜனனி கிச்சனில் இன்னும் கொஞ்ச நேரத்துல அவருடைய திட்டமெல்லாம் தெரியும் என சொல்லிக் கொண்டிருக்க அதற்கேற்றார் போல கதிர் குடிபோதையில் சொன்ன விஷயங்களை கேட்டு கரிகாலன் வீட்டுக்குள் நுழைந்து என்ன மாமா இவங்கள கூப்பிட்டு உட்கார வச்சு பேசிகிட்டு இருக்கீங்க? அப்போ எங்களுக்கு கொடுத்த வாக்கு என்னாச்சு என உண்மையை போட்டு உடைக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதனால் குணசேகரன் அடுத்து என்ன செய்யப் போகிறார்? ஆதிரை கல்யாண விஷயத்தில் நடக்கப்போவது என்ன? என இன்றைய எபிசோடு பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.