சூர்யா ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ் காத்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Etharkum Thuninthavan Telungu Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
மார்ச் மாதம் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தெலுங்கில் சூர்யா அவர்களே இந்த படத்திற்கு டப்பிங் பேசி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனால் தெலுங்கு ரசிகர்களுக்கு எதற்கும் துணிந்தவன் டபுள் கொண்டாட்டமாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.