Etharkum Thuninthavan Shooting Wrapped Update

எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Etharkum Thuninthavan Shooting Wrapped Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க டி இமான் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க சூரி, சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், விஜய் டிவி புகழ் என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

பாராலிம்பிக் டுடே : அசத்தினார் சிங்ராஜ் அதானா.. இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்.!

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். இந்த படத்திற்காக அனைவரும் உழைப்பைக் கொட்டி கொடுத்தார்கள். குறிப்பாக சூர்யா, சன் பிக்சர்ஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோருக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

Rate-ஐ கேட்டு Heart Attack-ஏ வந்துருச்சு..,Fun Shopping With Sarath and Krithika..! | Velavan Stores

படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்ட நிலையில் வெகு விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.