நடிகர்களுக்கே தெரியாமல் பிரபல சீரியல் கடைசி நாள் ஷூட்டிங் நடந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பூவே உனக்காக. பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
முதலில் ஒருவர் நாயகனாக நடித்து வந்த நிலையில் திடீரென அவர் விலகிக்கொள்ள அதன்பிறகு அவருக்கு பதிலாக அசீம் நடித்து வருகிறார். பிறகு மீண்டும் சீரியல் விறுவிறுப்பு அடையத் தொடங்கிய நிலையில் நாயகியாக நடித்து வந்த ராதிகா ப்ரீத்தி விலகிக் கொள்ள அவருக்கு பதிலாக வர்ஷினி என்பவர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென சமீபத்தில் கடைசி நாள் ஷூட்டிங் நடந்துள்ளது. இது குறித்து சில நடிகர்களிடம் விசாரிக்கையில் எங்களுக்கே இதுதான் கடைசி நாள் ஷூட்டிங் என தெரியாது. ஆனால் ஷூட்டிங் மிகவும் வித்தியாசமாக இருந்தது. திடீரென நாயகிக்கு எல்லா நினைவுகளும் நினைவுக்கு வருவது போலவும், வில்லன் திருந்தி விடுவது போலவும் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டன.
பொதுவாக கடைசி நாள் சூட்டிங் என்றால் கொண்டாட்டமாக இருக்கும் ஆனால் இது கடைசி நாள் ஷூட்டிங் என்று தெரியாமல் முடிந்துவிட்டது. சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு கடைக்கு நான் ஷூட்டிங் நடந்தது இது தான் முதல் முறை என தெரிவித்துள்ளனர்.