நடிகர் சேதுவின் இறுதி ஊர்வலத்தில் கேட்ட குரல் ஒன்று அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
Emotional Incident in Sethu Death : தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன்.
டாக்டரான இவர் இரு தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவருடைய இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. நண்பனின் தோள் மீது கைபோட்டு சுற்றுவதற்கு பதிலாக சந்தானம் சேதுவின் பூத உடலை தன் தோள் மீது சுமந்து சென்றார்.
இந்த காட்சி அனைவரையும் கலங்க வைத்த நிலையில் தற்போது இன்னொரு சம்பவம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
இறுதி ஊர்வலத்திற்காக வீட்டிலிருந்து சேதுவின் உடலை வெளியே கொண்டு வந்த போது அவரது உறவினர் ஒருவர் அவனுக்கு ஆடி கார், பென்ஸ் கார் தான் பிடிக்கும்.. இப்போ அவனை இப்படி தூக்கிட்டு போறீங்களே என கதறி உள்ளார்.
அந்த நபரின் இந்த கதறல் சத்தம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.